என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் தை பூஜை திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்17 Jan 2017 4:46 AM GMT (Updated: 17 Jan 2017 4:46 AM GMT)
உடன்குடி அருகே பிரசித்தபெற்ற செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் தை பூஜை திருவிழா நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் தை பூஜை திருவிழா 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு தை பூஜை திருவிழா நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணிக்கு அன்னதானத்துடன் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு மேக்கட்டி பூஜை நடக்கிறது.
வரும் 19, 20 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவில் சமய சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
வரும் 21-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறும். விழா நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, தங்கியிருந்து சாமி தரிசனம் செய்வதற்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் இசக்கியப்பன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு தை பூஜை திருவிழா நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணிக்கு அன்னதானத்துடன் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு மேக்கட்டி பூஜை நடக்கிறது.
வரும் 19, 20 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவில் சமய சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
வரும் 21-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறும். விழா நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, தங்கியிருந்து சாமி தரிசனம் செய்வதற்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் இசக்கியப்பன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X