search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியே 47 லட்சம்
    X

    திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியே 47 லட்சம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 47 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக மொத்தம் 9 ஆயிரம் திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து திருமலைக்கு வந்தனர். அன்று காலை 9 மணியில் இருந்து இரவு 7 மணிவரை 42 ஆயிரத்து 735 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இலவச தரிசனத்துக்கு 4 மணிநேரமும், திவ்ய தரிசனத்துக்கு 3 மணிநேரமும், ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்களுக்கு 2 மணிநேரமும் ஆனது. ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 47 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய, தமிழகத்தில் இருந்து 40 சதவீத பக்தர்கள் வருவார்கள். சமீபத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், தமிழக பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்படுகிறது. மேலும் ரூபாய் நோட்டுகளால் ஏற்படும் சில்லரை தட்டுப்பாட்டாலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×