search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமிமலையில் கார்த்திகை பவுர்ணமி கிரிவலம் 13-ந் தேதி நடக்கிறது
    X

    சுவாமிமலையில் கார்த்திகை பவுர்ணமி கிரிவலம் 13-ந் தேதி நடக்கிறது

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் சார்பில் கார்த்திகை மாதம் பவுர்ணமி கிரிவலம் 13-ந் தேதி நடக்கிறது.
    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் சார்பில் கார்த்திகை மாதம் பவுர்ணமி கிரிவலமும், 15-ம் ஆண்டு தொடக்கமும் 13-ந் தேதி மாலை 6.30 மணி அளவில் வல்லப கணபதி சன்னதியில் நடக்கிறது.

    கிரிவலம் தஞ்சை மண்டல பாரத ஸ்டேட் வங்கி உதவி பொது மேலாளர் கணேசன் தலைமையில் நடை பெறுகிறது. கிரிவலத்தில் இமயவன் வழிகாட்டுதலுடன் நடத்தப்படும் கூட்டு வழிபாடு நடைபெறுகிறது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகிகள் கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், டிரஸ்டிஸ்கள் மாணிக்கம், சண்முகம், நெடுஞ்செழியன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    கிரிவலத்தில் பக்தர்களுக்கு ஸ்டேட் வங்கி, சுவாமிமலை கிளை சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×