என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் விழா
Byமாலை மலர்5 Dec 2016 5:46 AM GMT (Updated: 5 Dec 2016 5:47 AM GMT)
ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் ஆகிய 2 கோவில்களின் முன்பும் 24-ந் தேதி கம்பம் நடப்பட் டன. இந்த கம்பங்களுக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு குண்டம் பற்றவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை பக்தர்கள் தீ மிதிப்பதற்கு வசதியாக குண்டம் அமைக்கப்பட்டது. பின்னர் காலை 9.45 மணிக்கு கோவில் தலைமை பூசாரி ராஜா பிரகாசம் முதலில் குண்டம் இறங்கினார். அப்போது கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்கினர். பின்னர் காப்பு கட்டிய பக்தர்களை தொடர்ந்து திரளான ஆண்கள் -பெண்கள், சிறுவர்-சிறுமிகள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து மதியம் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். பின்னர் மதியம் 12 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.
வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு கம்பங்கள் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல் மற்றும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
இந்த நிலையில் நேற்று காலை பக்தர்கள் தீ மிதிப்பதற்கு வசதியாக குண்டம் அமைக்கப்பட்டது. பின்னர் காலை 9.45 மணிக்கு கோவில் தலைமை பூசாரி ராஜா பிரகாசம் முதலில் குண்டம் இறங்கினார். அப்போது கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்கினர். பின்னர் காப்பு கட்டிய பக்தர்களை தொடர்ந்து திரளான ஆண்கள் -பெண்கள், சிறுவர்-சிறுமிகள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து மதியம் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். பின்னர் மதியம் 12 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.
வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு கம்பங்கள் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல் மற்றும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X