என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியவை
Byமாலை மலர்1 Dec 2016 6:06 AM GMT (Updated: 1 Dec 2016 6:06 AM GMT)
ஐயப்பனை அன்னதான பிரபு என்பார்கள். ஐயப்பன் கோயில் செல்லும் ஏழை பக்தர்கூட கஷ்டப்படுபவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்.
ஐயப்பனை அன்னதான பிரபு என்பார்கள். ஐயப்பன் கோயில் செல்லும் ஏழை பக்தர்கூட கஷ்டப்படுபவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். பணம் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. உடல் உழைப்பையும் கொடுக்கலாம். வசதி படைத்தவர்கள் நிச்சயமாக அன்னதானம் செய்ய வேண்டும். தானம் செய்வதற்கு முன் படுக்கை பூஜை அல்லது வெள்ளம்குடி பூஜை நடத்த வேண்டும். கன்னி ஐயப்பன்மார்கள் இந்த பூஜையை கட்டாயம் செய்யவேண்டும்.
சபரிமலைக்கு இருமுடி கட்டுஏந்தி புறப்படுவதற்கு முன் கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி 11ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் இந்த பூஜையை நடத்த வேண்டும். வீட்டின் கிழக்குப் பாகத்தில் ஏழு கோல் சதுரத்தில் பந்தல் அமைக்கவேண்டும். பந்தலை அலங்கரித்து நடுவீல் அலங்கார மண்டபம் அமைக்க வேண்டும். மண்டபத்தில், ஐயப்பன் படம் அல்லது சிலையை அமைக்க வேண்டும்.
மேலும் கணபதி, மாளிகைப்புறத்தம்மன், கருப்பசாமி, கடுத்தசுவாமி, வாபர்சுவாமி, ஆழி ஆகியவற்றை அமைக்க உரிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த இடங்களில் சுவாமிகளுக்கு பதிலாக குத்துவீளக்கு ஏற்றி வைத்து அதன் முன்னர் அவல், பொரி, பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும். நடுப்பாகத்தில் ஐயப்பனை ஒரு பீடத்தின் மீது வைத்து பட்டு வீரித்து, அதன் முன்னால் இலை போட்டு, நெல்லும் அரிசியும் நிரப்பி வைக்க வேண்டும்.
கிழக்கு திசையை நோக்கி சுத்தம் செய்யப்பட்ட தேங்காயை வைக்க வேண்டும். அலங்கார மண்டபத்தின் கிழக்குப்பாகத்தில் ஆழிஅமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும். அதில் வீறகுகளை அடுக்கி ஆழிவளர்க்க வேண்டும். பூவரசு அல்லது பலா வீறகுகளை ஆழியில் போட வேண்டும். ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தியபிறகு ஆழியை ஏற்ற வேண்டும். அனைத்து ஐயப்பன்மார்களும் ஆழியை வலம் வர வேண்டும். பூஜை முடிந்தபிறகு அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க வேண்டும். இதுதான் முறையான ஐயப்ப பூஜை ஆகும். கூட்டாகவும் இந்த பூஜையை நடத்தலாம்.
சபரிமலைக்கு இருமுடி கட்டுஏந்தி புறப்படுவதற்கு முன் கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி 11ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் இந்த பூஜையை நடத்த வேண்டும். வீட்டின் கிழக்குப் பாகத்தில் ஏழு கோல் சதுரத்தில் பந்தல் அமைக்கவேண்டும். பந்தலை அலங்கரித்து நடுவீல் அலங்கார மண்டபம் அமைக்க வேண்டும். மண்டபத்தில், ஐயப்பன் படம் அல்லது சிலையை அமைக்க வேண்டும்.
மேலும் கணபதி, மாளிகைப்புறத்தம்மன், கருப்பசாமி, கடுத்தசுவாமி, வாபர்சுவாமி, ஆழி ஆகியவற்றை அமைக்க உரிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த இடங்களில் சுவாமிகளுக்கு பதிலாக குத்துவீளக்கு ஏற்றி வைத்து அதன் முன்னர் அவல், பொரி, பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும். நடுப்பாகத்தில் ஐயப்பனை ஒரு பீடத்தின் மீது வைத்து பட்டு வீரித்து, அதன் முன்னால் இலை போட்டு, நெல்லும் அரிசியும் நிரப்பி வைக்க வேண்டும்.
கிழக்கு திசையை நோக்கி சுத்தம் செய்யப்பட்ட தேங்காயை வைக்க வேண்டும். அலங்கார மண்டபத்தின் கிழக்குப்பாகத்தில் ஆழிஅமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும். அதில் வீறகுகளை அடுக்கி ஆழிவளர்க்க வேண்டும். பூவரசு அல்லது பலா வீறகுகளை ஆழியில் போட வேண்டும். ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தியபிறகு ஆழியை ஏற்ற வேண்டும். அனைத்து ஐயப்பன்மார்களும் ஆழியை வலம் வர வேண்டும். பூஜை முடிந்தபிறகு அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க வேண்டும். இதுதான் முறையான ஐயப்ப பூஜை ஆகும். கூட்டாகவும் இந்த பூஜையை நடத்தலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X