search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாளய அமாவாசைக்கு நாமே எள் - நீர் கொடுக்கலாம்
    X

    மகாளய அமாவாசைக்கு நாமே எள் - நீர் கொடுக்கலாம்

    மகாளய அமாவாசைக்கு நாமே - விடியற்காலைப் பொழுதில் நதிகளில் நீராடி முடித்து, சூரியனை நோக்கியவாறு தண்ணீரில் இருந்தபடியே நீரினை அள்ளி முன்னோர்களை தியானித்து - மூன்று முறை நீரில் விடலாம்.
    பித்ரு பூஜைகளை வைதீக முறைப்படித் தான் செய்யவேண்டும் என்று எந்த சாஸ்திர விதியும் இல்லை. நாமே - விடியற்காலைப் பொழுதில் நதிகளில் நீராடி முடித்து, சூரியனை நோக்கியவாறு தண்ணீரில் இருந்தபடியே இரண்டு கைகளாலும் நீரினை அள்ளி முன்னோர்களை தியானித்து - மூன்று முறை நீரில் விடலாம். எள்ளும் நீரும் வார்த்து பூக்களைத் தூவி வழிபடலாம். 

    நமது அன்றாட வாழ்க்கையில் - எத்தனை எத்தனையோ உயிரினங்களின் அழிவிற்குக் காரணமாகி விடுகின்றோம்.
    நாம் செய்யும் அறச்செயல்களினால் அனைத்து உயிர்களுக்கும் நிவாரணம் கிடைக்கின்றது. அந்த உயிர்களும் நல்ல கதியினை அடைகின்றன. இன்னும் மறு பிறப்பு அடையாத பித்ருக்களால் தாம் நினைத்த போதெல்லாம் பூமிக்கு வர இயலாது. இந்த மகாளய பட்ச நாட்களில் தான் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    சூட்சும தேகத்துடன் பூமிக்கு வரும் அவர்கள் நாம் செய்யும் பித்ரு பூஜைகளை நேரடியாக ஏற்று மகிழ்கின்றனர். அதனால் அவர்களுக்கு சாந்தி உண்டாகின்றது. பித்ருக்கள் மறுபிறவியினை அடைந்திருந்தால் கூட, நாம் செய்யும் பூஜையின் பலன் - அவரவர்க்குத் தேவையான வகையில் அவர்களைச் சென்று அடைகின்றன.
    Next Story
    ×