என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மகாளய அமாவாசைக்கு நாமே எள் - நீர் கொடுக்கலாம்
Byமாலை மலர்29 Sep 2016 8:18 AM GMT (Updated: 29 Sep 2016 8:18 AM GMT)
மகாளய அமாவாசைக்கு நாமே - விடியற்காலைப் பொழுதில் நதிகளில் நீராடி முடித்து, சூரியனை நோக்கியவாறு தண்ணீரில் இருந்தபடியே நீரினை அள்ளி முன்னோர்களை தியானித்து - மூன்று முறை நீரில் விடலாம்.
பித்ரு பூஜைகளை வைதீக முறைப்படித் தான் செய்யவேண்டும் என்று எந்த சாஸ்திர விதியும் இல்லை. நாமே - விடியற்காலைப் பொழுதில் நதிகளில் நீராடி முடித்து, சூரியனை நோக்கியவாறு தண்ணீரில் இருந்தபடியே இரண்டு கைகளாலும் நீரினை அள்ளி முன்னோர்களை தியானித்து - மூன்று முறை நீரில் விடலாம். எள்ளும் நீரும் வார்த்து பூக்களைத் தூவி வழிபடலாம்.
நமது அன்றாட வாழ்க்கையில் - எத்தனை எத்தனையோ உயிரினங்களின் அழிவிற்குக் காரணமாகி விடுகின்றோம்.
நாம் செய்யும் அறச்செயல்களினால் அனைத்து உயிர்களுக்கும் நிவாரணம் கிடைக்கின்றது. அந்த உயிர்களும் நல்ல கதியினை அடைகின்றன. இன்னும் மறு பிறப்பு அடையாத பித்ருக்களால் தாம் நினைத்த போதெல்லாம் பூமிக்கு வர இயலாது. இந்த மகாளய பட்ச நாட்களில் தான் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சூட்சும தேகத்துடன் பூமிக்கு வரும் அவர்கள் நாம் செய்யும் பித்ரு பூஜைகளை நேரடியாக ஏற்று மகிழ்கின்றனர். அதனால் அவர்களுக்கு சாந்தி உண்டாகின்றது. பித்ருக்கள் மறுபிறவியினை அடைந்திருந்தால் கூட, நாம் செய்யும் பூஜையின் பலன் - அவரவர்க்குத் தேவையான வகையில் அவர்களைச் சென்று அடைகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X