search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவரங்குளம் சிவன் கோவிலில் புரட்டாசி மாத அபிஷேகம்
    X

    திருவரங்குளம் சிவன் கோவிலில் புரட்டாசி மாத அபிஷேகம்

    திருவரங்குளம் சிவன் கோவிலில் புரட்டாசி மாத விழாவை முன்னிட்டு பால் பழங்கள் பன்னீர் உள்ளிட்ட 18 வகையான மூலிகை அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    திருவரங்குளம் சிவன் கோவிலில் புரட்டாசி மாத பிரதோச விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தி பகவானுக்கு பால் பழங்கள் பன்னீர் உள்ளிட்ட 18 வகையான மூலிகை அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 

    பின்னர் நந்தி பகவானுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர் மற்றும் அருகம்புல் அலங்காரம் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நந்தி பகவானுக்கு தீபாராதனை நடைபெற்றது. மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமான் பெரியநாயகி அம்பாளுக்கு மகாதீபம் காட்டப்பட்டது. 

    முன்னதாக சிவபெருமானை காளைவாகனத்தில் எழுந்தருளச்செய்து பக்தர்கள் சிவ சிவ கோசத்துடன் பிரகார உலா மூன்று முறை நடைபெற்றது. இதேபோல் விஜயரெகுநாதபுரம் சிவன்கோவில், திருக்கட்டளை சோமசுந்த ரேஸ்வரர் மங்களநாயகி அம்பாள் கோவில், திருவுடை யார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி கோவில், திருமலைராயசமுத்திரம் ஸ்ரீகதிர்காமேஸ்வரர் கதிர்காமேஸ்வரிகோவில் ஆகிய இடங்களில் பிரதோச விழா நடைபெற்றது. 

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×