என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவரங்குளம் சிவன் கோவிலில் புரட்டாசி மாத அபிஷேகம்
Byமாலை மலர்29 Sep 2016 7:56 AM GMT (Updated: 29 Sep 2016 7:57 AM GMT)
திருவரங்குளம் சிவன் கோவிலில் புரட்டாசி மாத விழாவை முன்னிட்டு பால் பழங்கள் பன்னீர் உள்ளிட்ட 18 வகையான மூலிகை அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
திருவரங்குளம் சிவன் கோவிலில் புரட்டாசி மாத பிரதோச விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தி பகவானுக்கு பால் பழங்கள் பன்னீர் உள்ளிட்ட 18 வகையான மூலிகை அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் நந்தி பகவானுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர் மற்றும் அருகம்புல் அலங்காரம் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நந்தி பகவானுக்கு தீபாராதனை நடைபெற்றது. மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமான் பெரியநாயகி அம்பாளுக்கு மகாதீபம் காட்டப்பட்டது.
முன்னதாக சிவபெருமானை காளைவாகனத்தில் எழுந்தருளச்செய்து பக்தர்கள் சிவ சிவ கோசத்துடன் பிரகார உலா மூன்று முறை நடைபெற்றது. இதேபோல் விஜயரெகுநாதபுரம் சிவன்கோவில், திருக்கட்டளை சோமசுந்த ரேஸ்வரர் மங்களநாயகி அம்பாள் கோவில், திருவுடை யார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி கோவில், திருமலைராயசமுத்திரம் ஸ்ரீகதிர்காமேஸ்வரர் கதிர்காமேஸ்வரிகோவில் ஆகிய இடங்களில் பிரதோச விழா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X