search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உடன்குடி வைத்திலிங்கபுரம் உச்சினி மாகாளி அம்மன் கொடை விழா இன்று தொடக்கம்
    X

    உடன்குடி வைத்திலிங்கபுரம் உச்சினி மாகாளி அம்மன் கொடை விழா இன்று தொடக்கம்

    உடன்குடி வைத்திலிங்கபுரம் ஸ்ரீஉச்சினிமகாளி அம்மன், ஸ்ரீ சடச்சி அம்மன் திருக்கோவில் கொடை விழா இன்று (26-ந் தேதி) காலை தொடங்கியது.
    உடன்குடி வைத்திலிங்கபுரம் ஸ்ரீஉச்சினிமகாளி அம்மன், ஸ்ரீ சடச்சி அம்மன் திருக்கோவில் கொடை விழா இன்று (26-ந் தேதி) காலை மங்கள இசை, மகாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை 8 மணிக்கு கும்பாபிஷேகம் பிரசாதம் வழங்குதல் நடந்தது. மாலை 6 மணிக்கு நாடு நலம் பெறவேண்டி பெண்கள் நடத்தும் திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, 12 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் கும்பம் வீதி வருதல் நடைபெறுகிறது.

    நாளை 27-ந்தேதி காலை 9 மணிக்கு உடன்குடி கீழ பஜாரில் உள்ள கண்டு கொண்ட விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், 11 மணிக்கு வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு அம்பாளுக்கு வெள்ளி அங்கிசாத்தி சிறப்பு அலங்கார பூஜை, தொடர்ந்து கும்பம் வீதி வருதல், இரவு 9 மணிக்கு வில்லிசை, நடு இரவு 12 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை, தொடர்ந்து வாண வேடிக்கையுடன் கும்பம் தெரு வீதி வருதல் நடக்கிறது.

    28-ந்தேதி காலை 10 மணிக்கு பொங்கலிடுதல், காலை 11 மணிக்கு வில்லிசை, தொடர்ந்து சிறப்பு பூஜையுடன் கும்பம் வீதி வருதல், மாலை 4 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், தொடர்ந்து பிரசாதம் வழங்குதல், இரவு 10 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வைத்திலிங்கபுரம் யாதவர் சமுதாய மக்கள் செய்துவருகின்றனர்.
    Next Story
    ×