என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பசுபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா 12-ந் தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்4 April 2016 4:29 AM GMT (Updated: 4 April 2016 4:29 AM GMT)
நாகர்கோவில் இருளப்பபுரம் பசுபதீஸ்வரர்- பிரசன்னபார்வதி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது.
நாகர்கோவில் இருளப்பபுரம் பசுபதீஸ்வரர்- பிரசன்னபார்வதி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவில் முதல் நாளான 12-ந் தேதி காலை 6 மணிக்கு தேவார பஜனை, 7.30 மணிக்கு கொடியேற்றம், 8 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு முருக பெருமானுக்கு சஷ்டி அபிஷேகம், மாலை 3 மணிக்கு துர்கா பூஜை, மாலை 6.30 மணிக்கு 1,008 திருவிளக்கு பூஜை வழிபாடு ஆகியன நடக்கிறது. 13-ந் தேதி திருவாதிரை விழாவும், இளைஞர் நற்பணி மன்ற ஆண்டு விழாவும் நடக்கிறது.
வருகிற 14-ந் தேதி (சித்திரை 1-ந்தேதி) காலை 7 மணிக்கு கணிகாணல் நிகழ்ச்சியும், கைநீட்டம் வழங்குதலும், காலை 10 மணிக்கு பாலாபிஷேகமும் நடக்கிறது. 15-ந் தேதி இரவு சாந்தி விநாயகர் அபிஷேகமும், 16-ந் தேதி திருவெம்பாவை அபிஷேகம், மகளிர் மன்ற மாநாடு நடக்கிறது. 17-ந் தேதி இரவு 61-வது இந்து சமய மாநாடு நடக்கிறது.
18-ந் தேதி இரவு 7 மணிக்கு பிரசன்ன பார்வதி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 19-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சுவாமி பரிவேட்டை போன்றவை நடக்கிறது. திருவிழா இறுதி நாளான 21-ந் தேதி காலை 9 மணிக்கு பாலாபிஷேகம், மதியம் 12 மணிக்கு காவடி ஆட்டம், 1 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு சித்திரை திருவிழா சிறப்பு மாநாடு போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.
வருகிற 14-ந் தேதி (சித்திரை 1-ந்தேதி) காலை 7 மணிக்கு கணிகாணல் நிகழ்ச்சியும், கைநீட்டம் வழங்குதலும், காலை 10 மணிக்கு பாலாபிஷேகமும் நடக்கிறது. 15-ந் தேதி இரவு சாந்தி விநாயகர் அபிஷேகமும், 16-ந் தேதி திருவெம்பாவை அபிஷேகம், மகளிர் மன்ற மாநாடு நடக்கிறது. 17-ந் தேதி இரவு 61-வது இந்து சமய மாநாடு நடக்கிறது.
18-ந் தேதி இரவு 7 மணிக்கு பிரசன்ன பார்வதி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 19-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சுவாமி பரிவேட்டை போன்றவை நடக்கிறது. திருவிழா இறுதி நாளான 21-ந் தேதி காலை 9 மணிக்கு பாலாபிஷேகம், மதியம் 12 மணிக்கு காவடி ஆட்டம், 1 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு சித்திரை திருவிழா சிறப்பு மாநாடு போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X