search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (23-8-2016 முதல் 29-8-2016 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (23-8-2016 முதல் 29-8-2016 வரை)

    23-8-2016 முதல் 29-8-2016 வரை நடக்க உள்ள இந்த வார முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை பார்க்கலாம்.
    23-ந் தேதி (செவ்வாய்) :

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதி உலா.
    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    24-ந் தேதி (புதன்) :

    * திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோவிலிலும், இரவு தங்க முத்துக் கிடா வாகனத்திலும் பவனி வருதல்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் சகசர கலசாபிஷேகம்.
    * கீழ்நோக்கு நாள்.

    25-ந் தேதி (வியாழன்) :

    * கோகுலாஷ்டமி.
    * கார்த்திகை விரதம்.
    * திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை முத்துக்கிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் திருவீதி உலா.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    26-ந் தேதி (வெள்ளி) :

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.
    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    * கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    27-ந் தேதி (சனி) :

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திண்டுக்கல், மிலட்டூர் ஆகிய தலங்களில் உள்ள விநாயகப் பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம்.
    * திருச்செந்தூர் முருகப்பெருமான் கோ ரதத்திலும், இரவு வெள்ளி தேரிலும் பவனி வருதல்.
    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.
    * சமநோக்கு நாள்.

    28-ந் தேதி (ஞாயிறு) :

    * சர்வ ஏகாதசி.
    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை. மாலை தங்கச் சப்பரத்தில் பவனி.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
    * திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை வீணை மோகினி அலங்காரத்தில் காட்சி தருதல், இரவு ராம அவதார காட்சி.
    * மேல்நோக்கு நாள்.

    29-ந் தேதி (திங்கள்) :

    * முகூர்த்த நாள்.
    * பிரதோஷம்.
    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுக நயினார் காலை சிவப்பு சாத்தி, பகலில் பச்சை சாத்தி பவனி வருதல்.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்திலும், உப்பூர் விநாயகர் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×