என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமண தடை நீக்கும் விநாயகர் விரதங்கள்
Byமாலை மலர்23 Dec 2016 8:38 AM GMT (Updated: 23 Dec 2016 8:39 AM GMT)
திருமணக்காலத்தை விரைவில் காண விரும்புபவர்கள் மஞ்சள் பிள்ளையாரை நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க வேண்டும்.
முதன்மைக் கடவுள் விநாயகருக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மிகவும் உகந்த நாட்கள். மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்குதல் மிகவும் சிறந்தது. சதூர்த்தியன்று அருகம் புல்லை விநாயகருக்கு சாற்றி வழிபட்டால் வெற்றி என்பது உறுதி. அத்துடன் வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வழிபட்டால். நல்லருள் கிடைக்கும். திருமணக்காலத்தை விரைவில் காண விரும்புபவர்கள் மஞ்சள் பிள்ளையாரை நாற்பத்தெட்டு நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க வேண்டும்.
குடும்பத்தில் உள்ள வறுமையை அறவே அகற்ற வேண்டுமானால் வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றி வர வேண்டும். அதே நேரத்தில் பீடைகள்
நவக்கிரக தோஷமுள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய் தீபம் ஏற்றி வர வேண்டும். சகல சதுர்த்தி தினத்தில் குழந்தைகள் பெயரில் விநாயகர் சந்நிதியில் அர்ச்சனை செய்து பென்சில், நோட்டுகள், உறவினர் அல்லாத குழந்தைகளுக்கு இனிப்பும் தானம் தந்தால் வீட்டு குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் மிகுந்து வரும். குழந்தை வரம் வேண்டுவோர் சதுர்த்தியன்று சாதத்தை பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளையாக பாவித்து தூவினால் விநாயகரின் அருள் கிட்டும். நாக்கு பிறழாத குழந்தைகளுக்கு தமிழ் மாதத்தில் 3-வது செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு, பழங்களை படைத்து தானமாகத் தந்தால் உடனே தகுந்த பலன் கிடைக்கும்.
முக்கிய விநாயகர் விரதங்கள்
வெள்ளிக்கிழமை விரதம்: வைகாசி மாதம் வளர்பிறை, முதல் வெள்ளிக்கிழமையன்று, அதாவது மே மாதம் 20-ந் தேதியன்று தொடங்கி, வாரம்தோறும் வரும் வெள்ளிக் கிழமை களில் விரதம் இருக்க வேண்டும். வினாயகரைத் தியானிக்க வேண்டும். இரவில் ஒரு பொழுது பழம் உண்ணலாம்.
சிலர் வெள்ளிக்கிழமைகளுக்குப் பதிலாக வியாழக் கிழமைகளில் வினாயகரை சிறப்பாக வழிபடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விரதம்: ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று (இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி திங்கட்கிழமை) வினாயகர் வழிபாட்டுடன் இந்த வழிபாட்டைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாத வளர்பிறைச் சதுர்த்தியன்றும் விரதம் இருக்க வேண்டும். விரதத்தின் போது பகலில் ஒருபொழுது உண்ணலாம். அல்லது இரவில் சிறிதளவு சிற்றுண்டியோ, சில பழத் துண்டுகளோ சாப்பிடலாம்.
சங்கடஹர சதுர்த்தி விரதம்: திதி வரிசையில் நான்காவது வரும் திதி சதுர்த்தி திதியாகும். இதில் தேய்பிறையில் வரும் 4-வது திதியை சங்கட ஹர சதுர்த்தி திதி என்கிறோம். இந்த சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டி, இருக்கும் விரதம் ஆகும். அமைதியே வடிவான விநாயகப் பெருமானை வணங்கி எந்த காரியத்தையும் செய்தால் வெற்றியாக அமையும். சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி என புகழ் பெற்ற திருவிழா நடைபெறுகிறது. முப்பது திதிக்கும் முப்பது விநாயகர்கள் உள்ளனர். என வரலாறுகள் கூறுகின்றன. ஒவ்வொருவரும் தங்களின் பிறந்த திதிக்கான விநாயகரை அறிந்து வணங்கி வர வெற்றி உண்டாகும் . ஞானம் பிறக்கும்.கல்வி மேன்மை உண் டாகும். ஒவ்வொருவரும் வீட்டில் கணபதி பூஜை செய்துகொள்ள வேண்டும். கணபதி ஹோமம் செய்தால் தீவினை விலகி, நன்மை உண்டாகும்.
தேய்பிறைச் சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத் தடைகளாகிய சங்கடங்கள் தாமே ஒழிந்து, விலகிப் போய்விடும். ஆகவே, இந்தச் சதுர்த்தியைச் சங்கடஹரசதுர்த்தி என்பர். ஹர என்றால் அறுத்துவிடு என்று அர்த்தம்.
ஆவணி தேய்பிறைச் சங்கடஹர சதுர்த்தியன்று, அதாவது ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி அன்று விரதத்தைத் தொடங்கி ஒவ்வொரு மாதத் தேய்பிறை சதுர்த்தியிலும் விரதமிருக்க வேண்டும்.
கார்த்திகை, சஷ்டி விரதம்: கார்த்திகை மாதம் தேய்பிறை, பிரதமை முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை (இந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரம் வரை) தொடர்ந்து இருபத்தொரு நாள்கள் விரதமிருக்க வேண்டும். முதல் இருபது நாள்கள் ஒரு பொழுது உண்ணலாம். இருபத்தியோராம் நாள் முழு விரதம் காக்கவேண்டும். இருபத்தோர் இழைகளைக் கொண்ட காப்பு நூலை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் அணிந்திருக்க வேண்டியது அவசியம். வினாயகரைத் தொடர்ந்து வழிபட்டு வரவேண்டும்.
குடும்பத்தில் உள்ள வறுமையை அறவே அகற்ற வேண்டுமானால் வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றி வர வேண்டும். அதே நேரத்தில் பீடைகள்
நவக்கிரக தோஷமுள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய் தீபம் ஏற்றி வர வேண்டும். சகல சதுர்த்தி தினத்தில் குழந்தைகள் பெயரில் விநாயகர் சந்நிதியில் அர்ச்சனை செய்து பென்சில், நோட்டுகள், உறவினர் அல்லாத குழந்தைகளுக்கு இனிப்பும் தானம் தந்தால் வீட்டு குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் மிகுந்து வரும். குழந்தை வரம் வேண்டுவோர் சதுர்த்தியன்று சாதத்தை பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளையாக பாவித்து தூவினால் விநாயகரின் அருள் கிட்டும். நாக்கு பிறழாத குழந்தைகளுக்கு தமிழ் மாதத்தில் 3-வது செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு, பழங்களை படைத்து தானமாகத் தந்தால் உடனே தகுந்த பலன் கிடைக்கும்.
முக்கிய விநாயகர் விரதங்கள்
வெள்ளிக்கிழமை விரதம்: வைகாசி மாதம் வளர்பிறை, முதல் வெள்ளிக்கிழமையன்று, அதாவது மே மாதம் 20-ந் தேதியன்று தொடங்கி, வாரம்தோறும் வரும் வெள்ளிக் கிழமை களில் விரதம் இருக்க வேண்டும். வினாயகரைத் தியானிக்க வேண்டும். இரவில் ஒரு பொழுது பழம் உண்ணலாம்.
சிலர் வெள்ளிக்கிழமைகளுக்குப் பதிலாக வியாழக் கிழமைகளில் வினாயகரை சிறப்பாக வழிபடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விரதம்: ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று (இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி திங்கட்கிழமை) வினாயகர் வழிபாட்டுடன் இந்த வழிபாட்டைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாத வளர்பிறைச் சதுர்த்தியன்றும் விரதம் இருக்க வேண்டும். விரதத்தின் போது பகலில் ஒருபொழுது உண்ணலாம். அல்லது இரவில் சிறிதளவு சிற்றுண்டியோ, சில பழத் துண்டுகளோ சாப்பிடலாம்.
சங்கடஹர சதுர்த்தி விரதம்: திதி வரிசையில் நான்காவது வரும் திதி சதுர்த்தி திதியாகும். இதில் தேய்பிறையில் வரும் 4-வது திதியை சங்கட ஹர சதுர்த்தி திதி என்கிறோம். இந்த சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டி, இருக்கும் விரதம் ஆகும். அமைதியே வடிவான விநாயகப் பெருமானை வணங்கி எந்த காரியத்தையும் செய்தால் வெற்றியாக அமையும். சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி என புகழ் பெற்ற திருவிழா நடைபெறுகிறது. முப்பது திதிக்கும் முப்பது விநாயகர்கள் உள்ளனர். என வரலாறுகள் கூறுகின்றன. ஒவ்வொருவரும் தங்களின் பிறந்த திதிக்கான விநாயகரை அறிந்து வணங்கி வர வெற்றி உண்டாகும் . ஞானம் பிறக்கும்.கல்வி மேன்மை உண் டாகும். ஒவ்வொருவரும் வீட்டில் கணபதி பூஜை செய்துகொள்ள வேண்டும். கணபதி ஹோமம் செய்தால் தீவினை விலகி, நன்மை உண்டாகும்.
தேய்பிறைச் சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத் தடைகளாகிய சங்கடங்கள் தாமே ஒழிந்து, விலகிப் போய்விடும். ஆகவே, இந்தச் சதுர்த்தியைச் சங்கடஹரசதுர்த்தி என்பர். ஹர என்றால் அறுத்துவிடு என்று அர்த்தம்.
ஆவணி தேய்பிறைச் சங்கடஹர சதுர்த்தியன்று, அதாவது ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி அன்று விரதத்தைத் தொடங்கி ஒவ்வொரு மாதத் தேய்பிறை சதுர்த்தியிலும் விரதமிருக்க வேண்டும்.
கார்த்திகை, சஷ்டி விரதம்: கார்த்திகை மாதம் தேய்பிறை, பிரதமை முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை (இந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரம் வரை) தொடர்ந்து இருபத்தொரு நாள்கள் விரதமிருக்க வேண்டும். முதல் இருபது நாள்கள் ஒரு பொழுது உண்ணலாம். இருபத்தியோராம் நாள் முழு விரதம் காக்கவேண்டும். இருபத்தோர் இழைகளைக் கொண்ட காப்பு நூலை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் அணிந்திருக்க வேண்டியது அவசியம். வினாயகரைத் தொடர்ந்து வழிபட்டு வரவேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X