என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
Byமாலை மலர்27 Dec 2016 7:36 AM GMT (Updated: 27 Dec 2016 7:36 AM GMT)
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தென் மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற தர்காக்களில் நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்காவும் ஒன்று ஆகும். இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் நெல்லை மாவட்டத்தில் இருந்து மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டிற்கான கந்தூரி விழா வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கீழுர் ஜமாஅத் நிறைபிறை கொடி ஊர்வலம், வான வேடிக்கையுடன் பொட்டல்புதூர் முக்கிய வீதி வழியாக சென்று மாலையில் பள்ளிவாசலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறும்.
வருகிற 8-ந் தேதி இரவு 8 மணிக்கு பச்சைக்களை ஊர்வலம், 9-ந் தேதி காலை 10 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றம், 2 மணிக்கு மேலூர் ஜமாஅத் சார்பில் 10-ம் இரவு கொடிஊர்வலம் தொடங்கி மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன்வர மேள தாளங்கள் முழங்க ரவண சமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலை வந்தடையும்.
10-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 6 மணிக்கு தீப அலங்காரத்திடலில் தீப அலங்காரம் நடைபெறும்.
தொடர்ந்து 12-ந் தேதி மாலை, இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் நெல்லை, தென்காசியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
விழா ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.பி.ஷா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டிற்கான கந்தூரி விழா வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கீழுர் ஜமாஅத் நிறைபிறை கொடி ஊர்வலம், வான வேடிக்கையுடன் பொட்டல்புதூர் முக்கிய வீதி வழியாக சென்று மாலையில் பள்ளிவாசலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறும்.
வருகிற 8-ந் தேதி இரவு 8 மணிக்கு பச்சைக்களை ஊர்வலம், 9-ந் தேதி காலை 10 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றம், 2 மணிக்கு மேலூர் ஜமாஅத் சார்பில் 10-ம் இரவு கொடிஊர்வலம் தொடங்கி மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன்வர மேள தாளங்கள் முழங்க ரவண சமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலை வந்தடையும்.
10-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 6 மணிக்கு தீப அலங்காரத்திடலில் தீப அலங்காரம் நடைபெறும்.
தொடர்ந்து 12-ந் தேதி மாலை, இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் நெல்லை, தென்காசியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
விழா ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.பி.ஷா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X