search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரியபட்டணத்தில் உள்ள செய்யது அலி ஒலியுல்லாஹ் தர்காவில் நாளை கொடிஏற்றம்
    X

    பெரியபட்டணத்தில் உள்ள செய்யது அலி ஒலியுல்லாஹ் தர்காவில் நாளை கொடிஏற்றம்

    பெரியபட்டணம் மகான் செய்யது அலி ஒலியுல்லாஹ் தர்கா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு நாளை 9-ந்தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.
    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தில் மகான் செய்யது அலி ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. ஆண்டுதோறும் இங்கு சந்தனக்கூடு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி 115-வது ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    வரும் 19-ந்தேதி சந்தனக் கூடு திருவிழா, 20-ந்தேதி பகல்கூடு, செப்.30-ந்தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. இதில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொள்வதால் மத நல்லிணக்க விழாவாக நடத்தப்படுகிறது.

    விழா ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் செய்யது இபுராம்சா, தொழில் அதிபர் சிங்கம் பஷீர், ஊராட்சி தலைவர் எம்,எஸ்.கபீர், ஊராட்சி துணைத் தலைவர் ராஜேந்திரன், கமிட்டி துணைத் தலைவர்கள் சிராஜ்தீன், சாகுல் ஹமீது, செயலாளர் கவுன்சிலர் அபிபுல்லா, முத்தரையர் நகர் கோவிந்தன், தங்கையா நகர் சுந்தரலிங்கம், சுல்தான், சதக், களஞ்சியம், சாகுல் ஹமீது, கமிட்டி ஒருங் கிணைப்பாளர் அப்துல் மஜீது மற்றும் சுல்தானியா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×