என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இறைவன் அருளிய திருக்குர்ஆன்
Byமாலை மலர்4 April 2016 6:19 AM GMT (Updated: 4 April 2016 6:19 AM GMT)
இறைவன் அருளிய திருக்குர்ஆன் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுதலாக வந்த திருமறை.
இறைவன் அருளிய திருக்குர்ஆன் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுதலாக வந்த திருமறை. அந்தத் திருமறை ஒரே புத்தகமாக ஒரே நாளில் ஒரே தருணத்தில் இறைவனிடமிருந்து அருளப்பட்டதல்ல.
வெவ்வேறு தருணங்களில் வாழ்க்கையின் கேள்விகளுக்குப் பதிலாக அருளப்பட்ட வசனங்களை, பின்னாட்களில் ஒரே முழு நூலாக்கப்பட்டது. புனித நூலின் ஒவ்வொரு வசனமும் முகமது நபிக்கு (ஸல்) 'வஹி'யாக இறை அறிவிப்பாக வானவர் ஜிப்ரீல் (அலை) மூலம், நபிகளாரின் நாற்பதாவது வயது முதல் அவர் இறக்கும் வரை இருபத்தி மூன்று வருடங்களாக அருளப்பட்ட இறை அறிவிப்பை மனனம் செய்தும், எழுதி பத்திரப்படுத்தியும் வைக்கப்பட்டிருந்ததை நபிகளாருக்கு பிறகு அபூபக்கர் (ரலி) ஆட்சி காலத்தில் திரட்டப்பட்டிருந்தாலும், அதனை உதுமான் (ரலி) காலத்தில்தான் முழுமையாக்கப்பட்டு இன்று நம் கைகளில் தவழும் முழுமைப் பெற்ற திருக்குர்ஆனாகத் திகழ்கிறது.
திருக்குர்ஆனை மொழிப்பெயர்க்கப்படாத மொழியே இல்லை எனலாம். உலகில் அதிகப்படியாகத் தேடி படிக்கப்படும் புத்தகமாகக் குர்ஆன் திகழ்கிறது. உலகில் அதிகப்படியாக ஆராயப்பட்ட நூலில் குர்ஆனும் ஒன்று. அதில் மொத்தம் 114 சூரா உள்ளது. ஓவ்வொரு சூராவுக்கும் வெவ்வேறு தலைப்புகள் உள்ளன.
குர்ஆனின் மூலம் நாம் அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றை அறிந்து கொள்ள முடிவதோடு, அப்போதிருந்த கலாச்சாரத்தைப் பற்றியும் உணர்ந்து கொள்ள முடிகிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் இறைவனின் அறிவிப்புகள் என்றும் கட்டளைகள் என்றும் இஸ்லாமியர்களின் நம்பிக்கை. அதன் காரணமாகவே இஸ்லாமிய சட்டதிட்டங்களான `ஷரியத் சட்டம்` குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. தொழுகையில் ஒவ்வொரு நிலைகளிலும் குர்ஆனின் வசனங்களே ஓதப்படுகிறது. குர்ஆன் என்றாலே `ஓதுதல்` என்று பொருட்படும்.
உள்ளத் தூய்மைக்கும் ஆத்மாவின் ஆரோக்கியத்திற்கும் திருக்குர்ஆனை தினமும் ஓதுவோம்.
-ஜெஸிலா பானு.
வெவ்வேறு தருணங்களில் வாழ்க்கையின் கேள்விகளுக்குப் பதிலாக அருளப்பட்ட வசனங்களை, பின்னாட்களில் ஒரே முழு நூலாக்கப்பட்டது. புனித நூலின் ஒவ்வொரு வசனமும் முகமது நபிக்கு (ஸல்) 'வஹி'யாக இறை அறிவிப்பாக வானவர் ஜிப்ரீல் (அலை) மூலம், நபிகளாரின் நாற்பதாவது வயது முதல் அவர் இறக்கும் வரை இருபத்தி மூன்று வருடங்களாக அருளப்பட்ட இறை அறிவிப்பை மனனம் செய்தும், எழுதி பத்திரப்படுத்தியும் வைக்கப்பட்டிருந்ததை நபிகளாருக்கு பிறகு அபூபக்கர் (ரலி) ஆட்சி காலத்தில் திரட்டப்பட்டிருந்தாலும், அதனை உதுமான் (ரலி) காலத்தில்தான் முழுமையாக்கப்பட்டு இன்று நம் கைகளில் தவழும் முழுமைப் பெற்ற திருக்குர்ஆனாகத் திகழ்கிறது.
திருக்குர்ஆனை மொழிப்பெயர்க்கப்படாத மொழியே இல்லை எனலாம். உலகில் அதிகப்படியாகத் தேடி படிக்கப்படும் புத்தகமாகக் குர்ஆன் திகழ்கிறது. உலகில் அதிகப்படியாக ஆராயப்பட்ட நூலில் குர்ஆனும் ஒன்று. அதில் மொத்தம் 114 சூரா உள்ளது. ஓவ்வொரு சூராவுக்கும் வெவ்வேறு தலைப்புகள் உள்ளன.
குர்ஆனின் மூலம் நாம் அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தவற்றை அறிந்து கொள்ள முடிவதோடு, அப்போதிருந்த கலாச்சாரத்தைப் பற்றியும் உணர்ந்து கொள்ள முடிகிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் இறைவனின் அறிவிப்புகள் என்றும் கட்டளைகள் என்றும் இஸ்லாமியர்களின் நம்பிக்கை. அதன் காரணமாகவே இஸ்லாமிய சட்டதிட்டங்களான `ஷரியத் சட்டம்` குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. தொழுகையில் ஒவ்வொரு நிலைகளிலும் குர்ஆனின் வசனங்களே ஓதப்படுகிறது. குர்ஆன் என்றாலே `ஓதுதல்` என்று பொருட்படும்.
உள்ளத் தூய்மைக்கும் ஆத்மாவின் ஆரோக்கியத்திற்கும் திருக்குர்ஆனை தினமும் ஓதுவோம்.
-ஜெஸிலா பானு.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X