search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறுநீரக கோளாறுகளை குணபடுத்தும் திருத்தலம்
    X

    சிறுநீரக கோளாறுகளை குணபடுத்தும் திருத்தலம்

    சிறுநீரக கோளாறுகளை குணபடுத்தும், சிறுநீரக நோய்கள் தீர்க்கும் அரியதொரு சிவாலயம் உள்ள அற்புதமான தலம் சென்னை TO திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருகோயில் உள்ளது.
    பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. சிறுநீரக கோளாறுகளை குணபடுத்தும், சிறுநீரக நோய்கள் தீர்க்கும் அரியதொரு சிவாலயம் உள்ள அற்புதமான தலம் சென்னை TO திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருகோயில் உள்ளது. இங்குள்ள நடராஜ பெருமான் மூலிகைகளால் ஆனவர். இவருக்கு அபிஷேகம் செய்த நீரை பருகினால், சிறுநீரக நோய்கள் நீங்குகிறது.

    ஒரு கிலோ வெட்டி வேரினை வாங்கி 48 துண்டுகளாக மாலை கட்டி நடராஜருக்கு செலுத்தி அர்ச்சனை செய்து பின்னர் அந்த வெட்டி வேரினை ஓரு டம்ளர் நீரில் ஒவ்வொரு துண்டு வெட்டி வேரினையும் 48 நாட்கள் இரவு ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால் சிறுநீரக நோய் தீர்ந்து விடுகிறதாம். சிறுநீரக நோய் உள்ளவர்கள் நிறைய பேர்கள் வந்து தரிசித்து போகிறார்களாம். ஊர் பொதுமக்களும் கோயில் குருக்கலும் கூறுகிறார்கள்.



    இந்த கோவில் உள்ள தட்சிணாமூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்று. மாசி மாதம் வளர்பிறையில் பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜெபம் செய்தால் பல தோஷங்கள் நிவர்த்தி ஆகிறது. சுவாமிக்கு குத்துக்கடலையை மாலையிட்டு குத்துக்கடலை சுண்டல் பூஜையை விடியற்காலை 4.30 மணி முதல் 7 மணிக்குள் குரு ஓரையில் வழிபட வேண்டும். இந்த பூஜையை 11 வாரம் செய்து வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவிலான இந்த கோவில் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடாலூரில் இருந்து அடிக்கடி பஸ் போக்குவரத்து வசதி உள்ளது.
    Next Story
    ×