search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோய்களை போக்கும் அபிஷேக தீர்த்தம்
    X

    நோய்களை போக்கும் அபிஷேக தீர்த்தம்

    பல நோய்களை போக்கும் தீர்த்தமாக நத்தம் மாரியம்மன் கோவில் அபிஷேக தீர்த்தம் விளங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியின் தொகுப்பை பார்க்கலாம்.
    புகழ்பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் கருவறை முதல் வெளிப்பிரகாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 22 கல்தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டியல் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. ‘அம்மை’ என்பதை துரத்தும் அபிஷேக மூலிகை தீர்த்தம் நத்தம் மாரியம்மனின் அருளால் பலருடைய துன்பங்களையும் நீக்கி வருகிறது. அத்துடன் ‘அம்மை’ தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாரியம்மனின் அபிஷேக மூலிகை தீர்த்தத்தால் 3 நாளில் குணமாகும். இது போல் மேலும் பல நோய்களை போக்கும் தீர்த்தமாக மாரியம்மன் கோவில் அபிஷேக தீர்த்தம் விளங்குகிறது.



    நினைத்ததை நிறைவேற்றும் அம்மன் :

    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி பெருந்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    திருவிழா காலத்தில், பக்தர்கள் காப்பு கட்டுதல், 15 நாள் விரதமிருத்தல், அக்னிசட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் கட்டுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல் மற்றும் கழுமரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்தல் என்று பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

    பக்தர்கள் நினைத்ததை நிறைவேற்றும் அம்மனாக மாரியம்மன் திகழ்வதால் ஆண்டுதோறும் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    Next Story
    ×