என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சூரிய தோஷ பரிகாரத்திற்கான சிறந்த தலம்
Byமாலை மலர்23 Jan 2017 3:44 AM GMT (Updated: 23 Jan 2017 3:44 AM GMT)
சூரிய தோஷ பரிகாரத்திற்கான சிறந்த தலமாக சென்னை போரூருக்கு அருகில் உள்ள கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
சென்னை, வண்டலூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்.
இந்த அகத்தீஸ்வரர் ஆலயம், சூரிய பரிகார தலமாக விளங்குகிறது. 1,300 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். இத்தலத்தின் இறைவன் அகத்தீஸ்வரர். அவருக்கு வாகீச மகாதேவர் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. தெற்கு நோக்கி அருளும் அம்பிகையின் கருவறை கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், துர்க்கை, பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர். இங்கே தனி சன்னிதியில் சூரிய பகவான் ஈஸ்வரனை நோக்கிய வண்ணம் விசேஷமாக உள்ளார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும், சூரியபகவானுக்கு சிவப்பு நிற உடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். மேலும் சூரியனுக்குரிய தானியமான கோதுமையை, அவர் காலடிகளில் வைத்து மனமுருக வேண்டினால் சூரிய தோஷங்கள் நீங்குகின்றன. சூரிய பகவான் இத்தல மூலவரை வழிபட்டதால் சூரிய பரிகார தலமாக விளங்கி வருகிறது.
இந்த அகத்தீஸ்வரர் ஆலயம், சூரிய பரிகார தலமாக விளங்குகிறது. 1,300 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். இத்தலத்தின் இறைவன் அகத்தீஸ்வரர். அவருக்கு வாகீச மகாதேவர் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. தெற்கு நோக்கி அருளும் அம்பிகையின் கருவறை கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், துர்க்கை, பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர். இங்கே தனி சன்னிதியில் சூரிய பகவான் ஈஸ்வரனை நோக்கிய வண்ணம் விசேஷமாக உள்ளார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும், சூரியபகவானுக்கு சிவப்பு நிற உடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். மேலும் சூரியனுக்குரிய தானியமான கோதுமையை, அவர் காலடிகளில் வைத்து மனமுருக வேண்டினால் சூரிய தோஷங்கள் நீங்குகின்றன. சூரிய பகவான் இத்தல மூலவரை வழிபட்டதால் சூரிய பரிகார தலமாக விளங்கி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X