search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தடை, பகைவர் தொல்லை போக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
    X

    திருமண தடை, பகைவர் தொல்லை போக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

    திருமணம் தடைபடுபவர்கள், பகைவர்களின் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள் தேய்பிறை அஷ்டமி திதிகளில் பைரவருக்கு வழிபாடு செய்து வர வேண்டும்.
    தேய்பிறை அஷ்டமி திதிகளில் பைரவருக்கு செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்த, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

    இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.
    Next Story
    ×