search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பகை விலகி பாசம் கூடுதலாகக் கிடைக்க பரிகாரம்
    X

    பகை விலகி பாசம் கூடுதலாகக் கிடைக்க பரிகாரம்

    தாய்வழி மற்றும் மாமன் மற்றும் சித்தி, சித்தப்பா, போன்றவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டால் அவர்கள் ஒற்றுமையாக இருக்க ஒரு எளிய வழி இருக்கிறது.
    ஒரு சிலர் பெற்றோரிடம் அதிகப்பாசம் வைத்திருப்பர். ஒரு சிலருக்கு பெற்றோர்களின் பாசம் கிடைக்காது. தன்னைவிடத் தன் சகோதரர்கள் மீது அதிக பாசம் காட்டுகிறார்களே என்று ஆதங்கப்படுபவர்கள் பலருண்டு. தாய்வழி மற்றும் மாமன் மற்றும் சித்தி, சித்தப்பா, போன்றவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டால் அவர்கள் ஒற்றுமையாக இருக்கவும், உதவிக்கரம் நீட்டவும் ஒரு எளிய வழி இருக்கிறது.

    பவுர்ணமி அன்று காலை நேரத்தில் விரதமிருந்து கன்றுள்ள பசுவிற்கு கீரை, வைக்கோல் போன்ற உணவுகளைக் கொடுத்து வாலைத் தொட்டு வழிபடுவது நல்லது. அல்லது பசுவும், கன்றும் உருவமுள்ள பொம்மைகள், படங்களை வீட்டில் வைத்து கோமாதாவை கும்பிட்டு வழிபாடு செய்யலாம்.

    சந்திர ஓரையில் வெள்ளை வண்ணப் பொருட்களை தானம் கொடுக்கலாம். இதனால் தாய் மட்டுமல்ல, தாய்வழி உறவினர்கள் எல்லோருடைய பாசமும் கூடும். நேசமும் கூடும். உறவினர் பகை அகலும்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×