என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
‘பாக்கணும் போல இருக்கு’
Byமாலை மலர்29 April 2017 10:03 AM GMT (Updated: 29 April 2017 10:03 AM GMT)
எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர், தயாரிப்பில் உருவாகியுள்ள 5-வது படமான ‘பாக்கணும் போல இருக்கு’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் துவார் ஜி.சந்திரசேகர், தயாரித்துள்ள 5-வது படம் ‘பாக்கணும் போல இருக்கு’.
பரதன், அன்சிபா நாயகன், நாயகியாக நடித்துள்ள இதில், கஞ்சா கருப்பு, சூரி, சிங்கப்பூர் துரைராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்.பி. ராஜ்குமார் இயக்கியுள்ளார்.
படம் பற்றி கூறிய இயக்குனர்....
இந்த படத்தில் ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு போட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது. அருள்தேவின் இசையில் பாடல்கள் ஹிட். அதில் “உன் ரெட்டை சடை கூப்பிடுது முத்தம்மா...” என்ற பாடல் பிரபலமாகி உள்ளது.
கஞ்சா கருப்பு, சூரியின் கலக்கல் காமெடி, பரதன், அன்சிபா ஜோடியின் காதல், தாளம் போட வைக்கும் பாடல்கள், பரவசமடைய செய்யும் பிரம்மாண்ட காட்சிகள் என்று நூறு சதவீத பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் ஆதரவை பெறும் படமாக இருக்கும்” என்றார்
ஏற்கனவே ரிலீஸ் ஆவதாக இருந்த இந்த படம் திரையரங்குகள் கிடைக்காததால் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், இந்த படத்தை ரிலீஸ் செய்ய தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார். இதையடுத்து, இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதனால் உற்சாகம் அடைந்த தயாரிப்பாளர் தொடர்ந்து 5 படங்களை தயாரிக்க போவதாக கூறி இருக்கிறார்.
பரதன், அன்சிபா நாயகன், நாயகியாக நடித்துள்ள இதில், கஞ்சா கருப்பு, சூரி, சிங்கப்பூர் துரைராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்.பி. ராஜ்குமார் இயக்கியுள்ளார்.
படம் பற்றி கூறிய இயக்குனர்....
இந்த படத்தில் ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு போட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது. அருள்தேவின் இசையில் பாடல்கள் ஹிட். அதில் “உன் ரெட்டை சடை கூப்பிடுது முத்தம்மா...” என்ற பாடல் பிரபலமாகி உள்ளது.
கஞ்சா கருப்பு, சூரியின் கலக்கல் காமெடி, பரதன், அன்சிபா ஜோடியின் காதல், தாளம் போட வைக்கும் பாடல்கள், பரவசமடைய செய்யும் பிரம்மாண்ட காட்சிகள் என்று நூறு சதவீத பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் ஆதரவை பெறும் படமாக இருக்கும்” என்றார்
ஏற்கனவே ரிலீஸ் ஆவதாக இருந்த இந்த படம் திரையரங்குகள் கிடைக்காததால் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், இந்த படத்தை ரிலீஸ் செய்ய தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார். இதையடுத்து, இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதனால் உற்சாகம் அடைந்த தயாரிப்பாளர் தொடர்ந்து 5 படங்களை தயாரிக்க போவதாக கூறி இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X