என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
செண்பகக் கோட்டை
Byமாலை மலர்21 Sep 2016 11:13 AM GMT (Updated: 21 Sep 2016 11:13 AM GMT)
ஜெயராம் - ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ‘செண்பகக்கோட்டை’ என்ற படம் உருவாகியிருக்கிறது. அந்த படம் குறித்த முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்...
ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘செண்பகக்கோட்டை’. இப்படம் மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது. 2000 வருடத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் கதையாகவும், தற்போது நடக்கும் கதையாகவும், 20 வருடத்துக்கு முந்தைய கதையாகவும் இதில் கதைக்களம் உருவாகியிருக்கிறது.
மூன்று காலகட்டங்களிலும் நடக்கும் கதை ஒரு புள்ளியில் வந்து சந்திக்கும் இடமே ‘செண்பகக்கோட்டை’. இப்படத்தை கண்ணன் தாமரக்குளம் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் மலையாளத்தில் ஏற்கெனவே வெளிவந்திருந்தாலும், தமிழுக்கு ஏற்றார்போல் சில காட்சிகளை படமாக்கி பிறகு மலையாள படத்தோடு இணைத்து வெளியிடவிருக்கிறார்கள்.
இப்படத்தில் சம்பத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெயராமுக்கு இணையாக இவருடைய கதாபாத்திரமும் இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். மேலும் ஓம் பூரி, ஆடுகளம் நரேன், ஷீலு ஆபிரகாம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
முக்கியமான கதாபாத்திரங்களில் பேபி அக்ஷரா கிஷோர் மற்றும் பேபி ஏஞ்சலினா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடைய கதாபாத்திரம் படத்தில் பெரிதளவில் பேசப்படும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி தமிழில் வெளிவரவிருக்கிறது.
படத்திற்கு ரித்தேஷ் வேகா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ஜித்து தாமோதர். ஆர்ட் டைரக்டர் சாஹாஸ் பாலா. கதை - தினேஷ் பல்லாத், எடிட்டிங் - எஸ்.என்.பாசில், சந்தீப் நந்தகுமார். தயாரிப்பு - ஹர்ஷினி மூவிஸ்.
மூன்று காலகட்டங்களிலும் நடக்கும் கதை ஒரு புள்ளியில் வந்து சந்திக்கும் இடமே ‘செண்பகக்கோட்டை’. இப்படத்தை கண்ணன் தாமரக்குளம் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் மலையாளத்தில் ஏற்கெனவே வெளிவந்திருந்தாலும், தமிழுக்கு ஏற்றார்போல் சில காட்சிகளை படமாக்கி பிறகு மலையாள படத்தோடு இணைத்து வெளியிடவிருக்கிறார்கள்.
இப்படத்தில் சம்பத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெயராமுக்கு இணையாக இவருடைய கதாபாத்திரமும் இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். மேலும் ஓம் பூரி, ஆடுகளம் நரேன், ஷீலு ஆபிரகாம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
முக்கியமான கதாபாத்திரங்களில் பேபி அக்ஷரா கிஷோர் மற்றும் பேபி ஏஞ்சலினா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடைய கதாபாத்திரம் படத்தில் பெரிதளவில் பேசப்படும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி தமிழில் வெளிவரவிருக்கிறது.
படத்திற்கு ரித்தேஷ் வேகா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ஜித்து தாமோதர். ஆர்ட் டைரக்டர் சாஹாஸ் பாலா. கதை - தினேஷ் பல்லாத், எடிட்டிங் - எஸ்.என்.பாசில், சந்தீப் நந்தகுமார். தயாரிப்பு - ஹர்ஷினி மூவிஸ்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X