என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கவர்ச்சி படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு வலை விரிக்கும் காதல் நாயகி
Byமாலை மலர்21 July 2017 11:26 AM GMT (Updated: 21 July 2017 11:26 AM GMT)
காதல் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான அந்த நடிகை, கவர்ச்சி படங்களை வெளியிட்டு கவர்ச்சிக்கு மாற தயார் என்று தயாரிப்பாளர்களுக்கு நடிகை தூது விடுகிறாராம்.
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காதல் என்பதன் மலையாள வார்த்தையுடைய அந்த படம், தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற பூ டீச்சர் கதாபாத்திரம் அனைத்து தரப்பினராலும் விரும்பி பார்க்கப்பட்டது. அந்த படத்தின் மூலம் அறிமுகமான 3 நடிகைகளுமே முன்னணி இடங்களை பிடிக்க இந்த படம் காரணமாக அமைந்தது.
அந்த படத்தை தொடர்ந்து மூன்று நாயகிகளுக்குமே படவாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த மூன்று நடிகைகளுள் ஒருவரான நான்கெழுத்து நடிகை, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் பட்டதாரி நடிகருடன் அரசியல் படம் ஒன்றில் இரு நாயகிகளுள் ஒருவராக நடித்திருந்தார். தற்போது அந்த நடிகை தெலுங்கில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.
இதுவரை கவர்ச்சி இல்லாத பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கவர்ச்சிக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக கவர்ச்சி உடை அணிந்து வித விதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் வருகிறார்.
இது தெலுங்கு பட தயாரிப்பாளர்களுக்கு கவர்ச்சிக்கு மாற தயார் என்று நடிகை விடும் தூது, என்று தெலுங்கு பட உலகினர் கூறி வருகின்றனர். டோலிவுட்டில் அந்த நடிகை வெற்றிநடை போடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அந்த படத்தை தொடர்ந்து மூன்று நாயகிகளுக்குமே படவாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த மூன்று நடிகைகளுள் ஒருவரான நான்கெழுத்து நடிகை, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் பட்டதாரி நடிகருடன் அரசியல் படம் ஒன்றில் இரு நாயகிகளுள் ஒருவராக நடித்திருந்தார். தற்போது அந்த நடிகை தெலுங்கில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.
இதுவரை கவர்ச்சி இல்லாத பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கவர்ச்சிக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக கவர்ச்சி உடை அணிந்து வித விதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் வருகிறார்.
இது தெலுங்கு பட தயாரிப்பாளர்களுக்கு கவர்ச்சிக்கு மாற தயார் என்று நடிகை விடும் தூது, என்று தெலுங்கு பட உலகினர் கூறி வருகின்றனர். டோலிவுட்டில் அந்த நடிகை வெற்றிநடை போடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X