search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தாய் மடியை தேடும் நடிகை: வருத்தத்தில் நாயகன்
    X

    தாய் மடியை தேடும் நடிகை: வருத்தத்தில் நாயகன்

    தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் தனது தாயின் மடியை தேடி செல்வதால், நாயகன் ஒருவர் வருத்தத்தில் இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் ஆனந்த நடிகை. தனது முதல் படத்தில் கிடைத்த வெற்றியால் தொடர்ந்து, பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. பிரகாச நடிகருடன் தொடர்ந்து பல படங்களில் நடித்ததால், இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இந்நிலையில், நாயகியின் கைவசம் பல படங்களில் இருந்தாலும், அவரது நடிப்பில் சமீபத்தில் இரு படங்கள் ரிலீசாகியது. இதில் நாயகி குறித்து அவருடன் நடித்த லீலை நாயகன் பேட்டி ஒன்றில் கூறும்போது, பொதுவாக நாயகிகள் என்றால், அவர்களது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு நாயகர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த நடிகை, அவரது காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு நேராக அவரது அம்மா இருக்கும் இடத்திற்கு சென்று விடுவாராம்.

    அம்மாவின்றி அந்த நடிகை வருவதுமில்லை, போவதுமில்லை. மேலும் படப்பிடிப்பில் நாயகி தன்னிடம் அவ்வளவாக பேசவேயில்லை என்றும் நாயகன் விளையாட்டாக கூறியிருக்கிறாராம்.
    Next Story
    ×