search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எல்லாம் சுத்தப் பொய்: புகைப்படத்தை பார்த்து பதறிய நடிகை
    X

    எல்லாம் சுத்தப் பொய்: புகைப்படத்தை பார்த்து பதறிய நடிகை

    புகைப்படத்தை பார்த்து எல்லாம் சுத்தப் பொய் என்று ஒரு நடிகை பதறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    உலக நாயகர் பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றும் நடிகர், நடிகைகள் விவரங்களும் அறிவிக்கப்பட்டு, அவர்களையும் ஒரு வீட்டுக்குள் போட்டு அடைத்து விட்டார்கள்.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னேர லட்சுமிகரமான ஒரு நடிகை இந்த பட்டியலில் இடம்பிடித்திருப்பதாக ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்த புகைப்படத்தில் தன்னுடைய படமும் இடம்பெற்றிருப்பதை பார்த்தத அந்த லட்சுமிகரமான நடிகை ரொம்பவும் பதறிப் போய்விட்டாராம்.



    அந்த நிகழ்ச்சியில் நான் கிடையவே கிடையாது. அந்த செய்தியில் சொல்வதெல்லாம் சுத்தப் பொய். உண்மை கிடையாது என்று உடனடியாக விளக்கமும் கொடுத்தாராம். ஏன் அந்த நடிகை அப்படி பதறினார்? இதை சாதாரணமாகவே சொல்லியிருக்கலாம், ஏன் நடிகை பதற்றத்துடன் கூறவேண்டும்? என்று கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியே எழுந்துள்ளதாம்.

    இதுகுறித்து வாய் திறக்காவிட்டால் தன்னைப் பற்றி ஏதாவது புரளியை கிளப்பி விட்டுவிட்டார்கள் என்று பயந்துதான் அப்படி பதற்றத்துடன் நடிகை கூறியதாகவும் கூறப்படுகிறது.
    Next Story
    ×