என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகர் அகில் திருமணம் திடீர் ரத்து
Byமாலை மலர்23 Feb 2017 4:31 AM GMT (Updated: 23 Feb 2017 4:31 AM GMT)
நாகார்ஜுன் மகன் நடிகர் அகில் திருமணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுன், நடிகை அமலா தம்பதியின் மகன் அகில். நாகார்ஜுனின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் காதல் மலர்ந்து, இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
அகிலும், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜி.வி.கே.ரெட்டியின் பேத்தி ஸ்ரேயா பூபாலை காதலித்தார். ஸ்ரேயா பூபால் பேஷன் டிசைனராக இருக்கிறார். இவர்கள் காதலுக்கு, இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து, திருமணத்துக்கும் ஏற்பாடு செய்தார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் அகில், ஸ்ரேயா பூபால் நிச்சயதார்த்தம் நடந்தது. மே மாதம் இத்தாலியில் இவர்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இதற்காக ஐதராபாத்தில் இருந்து 700 விருந்தினர்களை அழைத்துச்செல்ல திட்டமிட்டனர். அவர்களுக்கான விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது.
இத்தாலியில் இவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல்களில் அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது இந்த திருமணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விருந்தினர்கள் ஒவ்வொருவரிடமும் திருமண வீட்டார் தொடர்பு கொண்டு திருமணம் நின்றுபோனதாகவும், இத்தாலி புறப்பட தயாராக வேண்டாம் என்றும் கூறி வருகிறார்கள். திருமணம் ரத்தானதற்கான காரணம் தெரியவில்லை. இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகிலும், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜி.வி.கே.ரெட்டியின் பேத்தி ஸ்ரேயா பூபாலை காதலித்தார். ஸ்ரேயா பூபால் பேஷன் டிசைனராக இருக்கிறார். இவர்கள் காதலுக்கு, இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து, திருமணத்துக்கும் ஏற்பாடு செய்தார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் அகில், ஸ்ரேயா பூபால் நிச்சயதார்த்தம் நடந்தது. மே மாதம் இத்தாலியில் இவர்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இதற்காக ஐதராபாத்தில் இருந்து 700 விருந்தினர்களை அழைத்துச்செல்ல திட்டமிட்டனர். அவர்களுக்கான விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது.
இத்தாலியில் இவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல்களில் அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது இந்த திருமணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விருந்தினர்கள் ஒவ்வொருவரிடமும் திருமண வீட்டார் தொடர்பு கொண்டு திருமணம் நின்றுபோனதாகவும், இத்தாலி புறப்பட தயாராக வேண்டாம் என்றும் கூறி வருகிறார்கள். திருமணம் ரத்தானதற்கான காரணம் தெரியவில்லை. இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X