என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அரவிந்த் சாமியுடன் இணைந்த பிரபல ஹீரோயின்
Byமாலை மலர்23 Feb 2017 3:31 AM GMT (Updated: 23 Feb 2017 4:30 AM GMT)
இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி-ரித்திகா சிங் இணைந்து நடிக்க உள்ள படத்தில் பிரபல நடிகை ஒருவரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த நடிகை யார் என்பதை கீழே பார்ப்போம்.
மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிப்பில் பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 20 வருடங்களுக்குப் முன்பு வெளியான `புதையல்' படத்திற்கு பிறகு, இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி மீண்டும் நடித்து வருகிறார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி உள்ளிட்ட 3 நாயகிகள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு `வணங்காமுடி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் படக்குழு அதனை மறுத்துள்ளது.
முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட் OAK, சுந்தர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கிய நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சிம்ரன் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய டி. இமான் இசையமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், சிவா யாதவ் கலையையும் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு `வணங்காமுடி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் படக்குழு அதனை மறுத்துள்ளது.
முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட் OAK, சுந்தர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கிய நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சிம்ரன் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய டி. இமான் இசையமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், சிவா யாதவ் கலையையும் மேற்கொள்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X