search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ குணம்"

    • முக்கனிகளில் பிரபலமான கனி வாழை.
    • அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கும்.

    முக்கனிகளில் பிரபலமான கனி வாழையாக கருதப்படுகிறது. அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கக் கூடியதாக உள்ளது. வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

    இரும்புச்சத்து வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை உட்கொள்வதால், ரத்த சோகை நீங்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலையும் சுறுசுறுப்பையும் உடனடியாகக் கொடுக்கும். இதனால் தான் விளையாட்டு வீரர்கள் அடிக்கடி வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.

    வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது, வாழைப்பழம். 100 கிராம் பழத்தில் 90 கலோரியை இது தருகிறது. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன.

    உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் பி-6, ரத்தசோகை போன்ற

    குறைபாடுகள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். இதய ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.

    தாது உப்புக்களைப் பொறுத்த வரையில், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மெக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.

    100 கிராம் வாழைப்பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் உள்ளது. இது, இதயத்துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றை செய்கிறது.

     மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.

    ஒவ்வாமையால் கஷ்டப்படுபவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது. இதில் அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது ஒவ்வாமை ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

    தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான அல்சர் பிரச்சினை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.

    வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

    • கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.
    • விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    சுனாமி தாக்குதலுக்கு பிறகு இங்கு தயாரிக்கப்பட்ட சுனாமிகா பொம்மை உலக அளவில் புகழ் பெற்றது. இந்த நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில் இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது.

    அண்மையில் இந்த நிறுவனம் துளசி, சந்தனம், கத்தாழை போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை கொண்டு துணிகளை உற்பத்தி செய்து அவற்றை கொண்டு ஆடைகளை தயாரித்து வருகின்றது.

    இவற்றை ஆன்லைன், உள்ளூர் கடைகள், வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் தனி விற்பனையகம் அமைத்து விற்பனை செய்து வருகிறது.

    ஆரோவில்லை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இந்த ஆயத்த ஆடை நிறுவனம் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் உடைகளை தயாரிக்கிறது.

    விலை சற்று அதிகம் என்றாலும் இந்த உடைகளுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    வாடிக்கையாளர்கள் இந்த உடைகளை அணிந்து வலம் வந்த வித்தியாசமான பேஷன் ஷோ புதுவை நகர விற்பனை கூடத்தில் நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ரசாயன கலக்காத ஆயத்த ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து கைத்தட்டல் பெற்றனர்.

    பெண்கள் சுய தொழில் செய்து சம்பாதிக்க முடியும் என்பதை வெளிபடுத்தும் விதமாக இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • குமரி மாவட்டத்தில் போட்டிபோட்டு வாங்கி செல்லும் மக்கள்
    • சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறுகளுக்கு தீர்வு தரும்

    நாகர்கோவில் :

    நாவல் பழம் என்றவுடன் தமிழ் ஆர்வலர்களுக்கு அவ்வை மூதாட்டியின் நினைவுதான் வரும்.

    அவ்வைக்கும், தமிழ் கடவுள் முருகனுக்கும் இடையே நாவல் பழத்தை மையமாக வைத்து ஒரு உரையாடல் இடம்பெற்றிருக்கும்.

    அதில் முருகன் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என அவ்வையிடம், கேட்பார். அவரும் பழத்தில் சுட்ட பழம் இருக்கிறதா? எனக்கேள்வி எழுப்பியபடி, எனக்கு சுட்ட பழமே தா, எனக்கூறுவார்.

    உடனே முருகன், அருகில் இருந்த நாவல் மரத்தை அசைக்க அதில் இருந்து நாவல் பழங்கள் மண்ணில் விழும். அதனை அவ்வையிடம் முருகன் எடுத்து கொடுப்பார்.

    அந்த பழத்தில் மண் ஒட்டி இருக்கும். அந்த மண்ணை அப்புறப்படுத்த, ஒவ்ெவாரு பழமாக எடுத்து அவ்வை, அதனை ஊதி, ஊதி உண்பார். இதனை பார்த்த முருகன், அவ்வையே பழம் என்ன சூடாக இருக்கிறதா? என்று கேட்பார்.

    இப்படி நாவல் பழத்தை வைத்து முருகன் நடத்திய திருவிளையாடல் தமிழ் பக்தி இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது.

    தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்ற நாவல் பழத்திற்கு பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளன என்பது பெரும்பாலோருக்கு தெரியாத விஷயம்.

    நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். தொடர்ந்து இதனை உண்டால் சர்க்கரை நோய் மட்டுப்படும் என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    அதோடு மட்டுமின்றி சிறநீரகம் மற்றும் மண்ணீரல் கோளாறுகளை நீக்கும் சக்தியும் நாவல் பழத்திற்கு உள்ளது. நாவல் பழத்தின் விதைகளில் கால்சியம் மற்றும் புரத சத்து உள்ளது.

    பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழத்தின் சிறப்பை தெரிந்து கொண்ட கிராம மக்கள் அதனை வாங்கி உண்ண ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    நாவல் மரங்கள் பெரும்பாலும் மலையோர கிராமங்களில் அதிகம் வளருகிறது. மதுரை, திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. இதுபோல குமரி மாவட்டத்திலும் கன்னியாகுமரி, பொத்தையடி, குண்டல், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் பகுதிகளில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன.

    இந்த மரங்களில் இருந்து விழும் பழங்களை இப்பகுதி மக்கள் போட்டி போட்டு எடுத்து செல்கிறார்கள். சிலர் வீடுகளிலும் இந்த மரத்தை வளர்க்கிறார்கள்.

    இப்போது நாவல் பழத்தின் மகிமை கிராமங்களை தாண்டி நகர் பகுதிகளுக்கும் எட்டியுள்ளது.

    இதனால் நகர்புற மக்களும் நாவல் பழங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். வழக்கமான பழங்களை போல் இல்லாமல் இந்த பழம் லேசான துவர்ப்பு சுவையுடன் இருக்கும். நன்றாக பழுத்த பழத்தின் மீது சிலர் உப்பு தூவி உண்பார்கள்.

    அது இன்னும் டேஸ்டியாக இருக்கும். இந்த பழத்தை உண்டு முடித்தவுடன் நாக்கு, நாவல் பழ கலருக்கு மாறிவிடும். இதனால் குழந்ைதகளும் நாவல் பழத்தை ஆர்வமாக கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்.

    நகர் பகுதிகளில் இந்த பழம் கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது. கிராம புறங்களில் இந்த பழத்தை கூறுபோட்டு விற்கிறார்கள். ஒரு கூறு ரூ.25 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

    நாகர்கோவில் பகுதியில் இப்போது தள்ளுவண்டிகளில் நாவல் பழம் விற்பனை ஜோராக நடக்கிறது. பெண்களும், மக்களும் இதனை ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.

    ×