search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WTO"

    • பிரச்சினைகள் குறித்த விவாதம் மற்றும் தீர்வு எட்டப்படும்.
    • தனியார் துறையை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    சர்வதேச வர்த்தக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உலக நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொள்ளும் 13-வது அமைச்சர்கள் மாநாடு அபுதாபியில் துவங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில் வர்த்தக துறை சார்ந்த மிக முக்கிய முடிவுகள் எட்டப்படும்.

    உலக வர்த்தக அமைப்பை அணுகுவது, அறிவுசார் சொத்து மற்றும் சர்ச்சைகளுக்கு தீர்வு எட்டுவது என பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து 13-வது சர்வதேச வர்த்தக கூட்டமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

     


    இன்று (பிப்ரவரி 26) அபுதாபியில் துவங்கியுள்ள 13-வது அமைச்சர்கள் மாநாடு பிப்ரவரி 29-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் உலக வர்த்தக கூட்டமைப்பு எல்லைக்குள் நடக்கும் பிரச்சினைகள் குறித்த விவாதம் மற்றும் தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாநாட்டில் உலக நாடுகளை சேர்ந்த வர்த்தக துறை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் என பலர் கலந்து கொள்கின்றனர். இதில் மொத்தம் 175 மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள், தனியார் துறையை சேர்ந்த தலைவர்கள், அரசு அல்லாத நிறுவனங்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.

    இன்றைய 13-வது அமைச்சர்கள் மாநாட்டில், வர்த்தகம், நிலைத்தன்மை மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது, அதற்கான வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து அமைச்சர்கள் ஆலோசித்தனர்.

    மேலும், சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்து பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.  

    மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்காவை உலக வர்த்தக அமைப்பு மிகவும் மோசமாக நடத்துவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Trump #WTO
    வாஷிங்டன் :

    உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியுள்ளது.

    அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் அதே அளவுக்கு பிற நாடுகள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க வேண்டும். இல்லையெனில் கூடுதல் வரி விதிக்கப்படும் என சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் டொனால்ட் டிரம்ப் வர்த்தகப்போர் நடத்தி வருகிறார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை பல மடங்கு உயர்த்தியது. இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இதர நாட்டு தலைவர்களுடன் டிரம்ப்புக்கு கருத்து மோதல் ஏற்பட்டு, அந்த மாநாட்டின் பாதியில் டிரம்ப் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், நெதர்லாந்து பிரதமர் மற்றும் டிரம்ப் வெள்ளை மாளிகையில் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்களிடம் டிரம்ப் கூறுகையில், உலக வர்த்தக அமைப்பு மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்காவை மிகவும் மோசமாக நடத்துவதாக விமர்சனம் செய்தார்.

    மேலும், உலக வர்த்தக அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுமா? எனும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. ஆனால், அமெரிக்காவை வர்த்தக அமைப்பு ஒழுங்காக நடத்தவில்லை எனில் சூழ்நிலையை பொருத்து எங்கள் முடிவு அமையும்’. என தெரிவித்தார்.

    இதுகுறித்து விளக்கம் அளித்த வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ‘உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடுகள் குறித்து டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். சீனா போன்ற நாடுகள் உலக வர்த்தக அமைப்பை சுயநலத்திற்காக பயன்படுத்தி நல்ல ஆதாயம் அடைகின்றன.

    வர்த்தக அமைப்பில் பல முக்கிய அம்சங்கள் இருந்தாலும் அவற்றில் டிரம்பிற்கு நம்பிக்கை இல்லை. எனவே, வர்த்தக அமைப்பின் செயல்முறைகளை சீரமைப்பது அவசியம். இது தொடர்பாகவே இனி எங்கள் நடவடிக்கைகள் அமையும்’ என தெரிவித்தார். #Trump #WTO
    ×