என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Coconut Day"

    • தென்னை மரத்தில் இருந்து நமக்கு இயற்கை பானமாக பதநீர், நீரா போன்றவையும் கிடைக்கிறது.
    • இந்தியாவில் தென்னை மர வளர்ப்பில் முதல் இடம் பிடித்து இருப்பது கேரள மாநிலம்.

    பெற்ற பிள்ளை சாப்பாடு போடவில்லை என்றாலும், வளர்த்த பிள்ளை (தென்னை) சாப்பாடு போடும் என்பது பழமொழி.

    இதைத்தான் நமது கவியரசு கண்ணதாசன், பிள்ளைய பெற்றால் கண்ணீரு, தென்னைய பெற்றால் இளநீரு என்று எழுதியிருப்பார். எத்தனை உண்மை பாருங்கள். அதனால்தான் தென்னையை பிள்ளையாக கருதி வளர்த்தனர் நம் முன்னோர்கள்.

    நமது அன்றாட வாழ்க்கையில் தென்னையின் பயன்பாடு இல்லாமல் இருக்காது. தென்னையில் இருந்து பெறப்படும் தேங்காய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை நமது உணவில் தினந்தோறும் பயன்படுத்துகிறோம். இதுதவிர இளநீரை இயற்கையின் குளிர்பானமாக குடித்து வருகிறோம்.

    தென்னை மரத்தில் இருந்து நமக்கு இயற்கை பானமாக பதநீர், நீரா போன்றவையும் கிடைக்கிறது. இவற்றின் மூலம் கருப்பட்டி, வெல்லம் போன்ற பொருட்களும் நமக்கு கிடைக்கின்றன. தென்னை ஓலை நம் வீட்டின் நிழல் பந்தல் அமைப்பதற்கு பயன்படுகிறது.

    இது தவிர தென்னை நாரில் இருந்து மெத்தை, காயர் பித் (தென்னை நார் கட்டி) உள்பட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இப்படி பல்வேறு விதங்களில் மனிதர்களின் வாழ்க்கையோடு ஒட்டி உறவாடும் தென்னை மரங்களின் நடவு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிகமாக இருந்தாலும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஈரோடு மாவட்டம் தாளவாடி ஆகிய இடங்களில் தென்னந்தோப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்தியாவில் தென்னை மர வளர்ப்பில் முதல் இடம் பிடித்து இருப்பது கேரள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென்னை தொழிலின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில் 2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி உலக தென்னை தினம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. உணவு, வருமானம் மற்றும் வாழ்வாதாரத்துக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் வெப்பமண்டல நாடுகளில், மக்களின் வாழ்க்கையில் தேங்காய்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அடையாளப்படுத்தப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் தென்னை தினம் கொண்டாடுவதற்கு ஒரு கருப்பொருள் வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தின் கருப்பொருள் 'தேங்காயின் சக்தியை வெளிக்கொணர்தல், உலகளாவிய நடவடிக்கைக்கு ஊக்கமளித்தல்' என்பதாகும்.

    இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தென்னை மரம் தற்போது பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வெள்ளை ஈ தாக்குதல், வண்டு தாக்குதல், வாடல்நோய் போன்றவைகள் தென்னை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதை கட்டுப்படுத்த இயற்கை மற்றும் ரசாயன உரங்களால் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    மேற்கண்ட நோய்களின் தாக்குதலால் பொள்ளாச்சி மற்றும் தென்னை நடவு செய்த பகுதிகளில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தேங்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் நோய்களில் இருந்து தென்னையை காப்பாற்ற தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், தென்னை விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட மரங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்பதும் தென்னை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    உலக தென்னை தினம் கொண்டாடும் நிலையில் "தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும்" என்ற பழமொழிக்கேற்ப தென்னை மற்றும் தென்னை விவசாயிகளை செழிக்க வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சத்துக்கள் அதிகம் நிறைந்த நீராகாரமாக தேங்காய் விளங்குகிறது.
    • சரும பராமரிப்பு, பாதுகாப்புக்கு தேங்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    செப்டம்பர் 2- இன்று உலக தேங்காய் தினம். ஒவ்வொரு நாளும் செப்டம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுக்க தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளவில் தேங்காய்களின் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில், இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

    விவசாயத்தில் மிக முக்கிய பங்கு வகிகக்கும் தேங்காய் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது ஆகும். உலகளவில் வெப்பமண்டல பகுதிகளில் அதிக வருவாய் ஈட்டிக் கொடுப்பதிலே தேங்காய் மிகமுக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தேங்காய்களின் முக்கியத்துவம், அவற்றால் நமக்கு கிடைக்கும் பலன்களை நினைவுகூற இந்த நாள் பெரிதும் உதவுகிறது.

     


    எவ்வித கலப்பும் இன்றி சுத்தமான மற்றும் சத்துக்கள் அதிகம் நிறைந்த நீராகாரமாக தேங்காய்கள் விளங்குகின்றன. இதுதவிர சரும பராமரிப்பு, பாதுகாப்புக்கு தேங்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், டயட் இருப்பவர்கள் உடலில் புத்துணர்ச்சியை பெற விரும்புவோர் முதலில் நாடுவது தேங்காயாகவே இருக்கிறது.

    கலாச்சாரம், ஊட்டச்சத்து மற்றும் பொருளாதர மேம்பாடு என தேங்காய் பற்றிய விழிப்புணர்வை உலக தேங்காய் தினத்தில் ஏற்படுத்துவோம். இந்நாளில் தென்னை விவசாயம், விளைச்சலில் நிலையான நடைமுறைகளை வலியுறுத்துவோம்.


     

    தேங்காயில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. உடலில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல கொழுப்புகள் தேங்காயில் உள்ளன. எலக்ட்ரோலைட் நிறைந்த இயற்கை பானமாக தேங்காய் நீர் விளங்குகிறது.

    தேங்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. தேங்காய் எண்ணெய் மிகவும் பிரபலமான இயற்கை மாய்ஸ்சரைசர் மற்றும் ஹேர் கண்டிஷனர் எனலாம்.

    • கிள்ளிகுளம் மாநில தென்னை நாற்றுப் பண்ணையில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது.
    • விவசாயிகளுக்கு தென்னை உர நிர்வாகம் பற்றிய செயல் விளக்கத்தினை வேளாண்மை அலுவலர் ராகுல் எடுத்துரைத்தார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கிள்ளிகுளம் மாநில தென்னை நாற்றுப் பண்ணையில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தலைமை உரையாற்றினார்.

    தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குனர் (அட்மா) ஜெயசெல்வி இன்பராஜ் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் பழனி வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு தென்னையில் சிறப்புகள் கடைபிடித்தல் மற்றும் மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி பற்றிய தொழில்நுட்ப உரையை கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியர் டாக்டர் பிரேம லட்சுமி எடுத்துரைத்தார். மண்ணியல் துறை பேராசிரியர் தலைவர் டாக்டர் சுரேஷ் உரை மேலாண்மை குறித்தும், பூச்சிகள் துறை பேராசிரியர் டாக்டர் அப்துல் ரசாக் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

    விவசாயிகளுக்கு கருத்து காட்சி மற்றும் தென்னை உர நிர்வாகம் பற்றிய செயல் விளக்கத்தினை தென்னை நாற்றுப் பண்ணை வேளாண்மை அலுவலர் ராகுல் எடுத்துரைத்தார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தென்னை நாற்றுப்பண்ணை வேளாண்மை அலுவலர் ராகுல், துணை வேளாண்மை அலுவலர் பரமசிவன், உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ் வெங்கடேஷ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் முத்து சங்கரி ஆகியோர் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தென்னை சாகுபடி விவசாயிகள் மற்றும் உழவர் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    ×