search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Killer"

    • சிவராமன் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
    • 7 பேர் கொண்ட கும்பல் சிவராமனை சரமாரியாக வெட்டியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே கோடாரங்குளம் பகுதியை சேர்ந்த வர் தங்கபாண்டியன். இவருடைய மகன் செல்வா என்ற சிவ ராமன்(வயது 25). இவர் பி.ஏ. படித்து விட்டு தனி யார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கொலை

    இவருடைய குடும்பத்தின ருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான சுடலை முத்து குடும்பத்தின ருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலையில் சிவராமன் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றபோது சுடலைமுத்து மகன் உலகநாதன் என்ற சங்கர் செல்போனில் சிவராமனை தொடர்பு கொண்டு சொத்து பிரச்சினை தொட ர்பாக பேச ஆலடியூர் கல் குவாரி அருகில் வருமாறு சிவராமனை அழைத்தார்.

    இதனை நம்பிய சிவராமன் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றார். அப்போது கல்குவாரி அருகில் சாலையோரம் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சிவராமனை சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.

    3 பேர் கைது

    இதுகுறித்து வி.கே.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து பிரம்மதேசத்தை சேர்ந்த முருகன், அம்பையை சேர்ந்த வெங்க டேஷ், மருதப்புரத்தை சேர்ந்த ராசு ஆகிய 3 பேரை கைது செய்தார்.

    இதில் தொடர்புடைய முக்கிய கொலையாளியான சங்கர், ராஜா உள்ளிட்ட 4 பேரை பிடிக்க அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    வில்லியனூரில் பைனான்ஸ் அதிபரை கொன்றது ஏன் என்பது குறித்து கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் கணுவா பேட்டைய சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). பைனான்ஸ் அதிபர்.

    இவர் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் கோட்டைமேடு சுடுகாட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை அவரது நண்பர்கள் ராஜா, சக்திவேல், சபரி, நடராஜன் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    கொலையாளி ராஜா போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    ராமலிங்கம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நானும் அவருடன் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்தேன். இந்த நிலையில் எனக்கு வேண்டிய சிலருக்காக ராமலிங்கத்திடம் இருந்து ரூ.10 லட்சம் வாங்கி கடனாக கொடுத்திருந்தேன்.

    ஆனால் அதை வாங்கியவர்கள் அசலையும், வட்டியையும் தரவில்லை. எனவே ராமலிங்கம் என்னிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    இதற்காக எனது நண்பர்கள் சக்திவேல், சபரி, நடராஜன் ஆகியோர் உதவுவதாக தெரிவித்தனர். எனவே ராமலிங்கத்தை கொல்வதற்கு திட்டத்தை உருவாக்கினோம்.

    நேற்று முன்தினம் மதியம் அவரை வில்லியனூரில் உள்ள மதுபாருக்கு அழைத்து சென்று நன்றாக குடிக்க வைத்தோம். அதன்பிறகு தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்தோம். இரவு மீண்டும் அவரை குடிக்க அழைத்து அங்கு வைத்து கொல்வது என்று திட்டமிட்டோம்.

    நாங்கள் இரவு நேரத்தில் கோட்டைமேடு சுடுகாட்டு பகுதியில் அமர்ந்து மது குடிப்பது வழக்கம். ராமலிங்கத்தை கொல்ல வேண்டும் என்பதற்காக இரும்பு குழாய் ஒன்றை எடுத்து சென்று அங்கு தயாராக வைத்திருந்தோம்.

    இரவு 9 மணி அளவில் ராமலிங்கத்தை அழைத்துக் கொண்டு நான் அங்கு சென்றேன். மற்ற 3 பேரும் பின்னர் வந்தனர். நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தோம். அப்போது சக்திவேல், ராஜாவிடம் ஏன் பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறாய் என்று கூறி ராமலிங்கத்தை அடித்தார்.

    அப்போது மறைத்து வைத்திருந்த இரும்பு குழாயை எடுத்து ராமலிங்கத்தின் தலையில் பலமுறை ஓங்கி அடித்தோம். இதில் மண்டை உடைந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். உடனே நாங்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். நல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு ராஜா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    கைதானவர்களிடம் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் விசாரணை நடத்தி இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    புதுவை குயவர் பாளை யத்தில் வங்கி பெண் ஊழியர் அம்சபிரபாவை கொலை செய்ததாக பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை குயவர் பாளை யத்தில் வங்கி பெண் ஊழியர் அம்சபிரபாவை கொலை செய்ததாக பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    இந்திய சட்டப்படி 18 வயதுக்கு குறைவானவர்கள் சிறுவர்களாக கருதப்பட வேண்டும் என்பதால் அந்த வாலிபர் மீது சிறுவர் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.

    ஆனால், அவரை பெரியவராக கருதுவதற்கு இன்னொரு வாய்ப்பு ஒன்று உள்ளது. அவருடைய உடல் வளர்ச்சியை ஆய்வு செய்து அவர் சிறுவர்தானா? அல்லது பெரியவரா? என்பதை முடிவு செய்யலாம்.

    இதற்காக ஒரு குழு ஒன்று உள்ளது. அந்த குழு நேரடியாக இதை ஆய்வு செய்யும். அதில், பெரியவருக்கான உடல் வளர்ச்சி அனைத்தும் தென் பட்டால் பெரிய நபராக கருதி அதற்கான சட்டத்தில் நடவடிக்கை எடுக்கலாம். அப்போது அவர் சீர்திருத்த பள்ளிக்கு பதிலாக ஜெயிலில் அடைக்கப்படுவார்.

    அம்சபிரபா கொலை நடந்து ஒரு வாரத்துக்கு பிறகு கொலையாளியை போலீசார் அடையாளம் கண்டனர். அவர் சிக்குவதற்கு அங்கிருந்த கண்காணிப்பு கேமரா முக்கிய காரணமாக இருந்தது. வீட்டின் முன் பக்கம் 2 கண்காணிப்பு கேமராக்கள் இருந்தன.

    அதில் வீட்டுக்கு மிக அருகே இருந்த முதல் கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வாலிபர் காலி மனை பகுதி வழியாக அம்சபிரபா வீட்டு அருகே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சி மதியம் 2.57 மணி அளவில் பதிவாகி இருக்கிறது.

    அதன் பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து சென்றதற்கான எந்த காட்சியும் இடம் பெறவில்லை. 3.50 மணி அளவில் அந்த வீட்டின் கீழ் இருந்த பெண்ணும், மற்ற சில பெண்களும் அங்கு நடமாடும் காட்சியும் பதிவாகி இருந்தது.

    அந்த கேமராவில் பதிவாகி இருந்த வாலிபர் உருவம் சரியாக தெரியவில்லை. எனவே, யார்? என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    அதன் பிறகு வீட்டில் இருந்து சற்று தூரத்தில் உள்ள மற்றொரு சந்திப்பு சாலையில் இருந்த கேமராவை ஆய்வு செய்தனர்.

    அதில், கொலை நடந்த பிறகு மாலையில் நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்தனர். அந்த நேரத்தில் அங்கு போலீசார் வந்து விசாரணை நடத்திய காட்சிகளும் அந்த கேமராவில் பதிவாகி இருந்தது.

    அப்போது அதில் ஒரு வாலிபர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். போலீசார் விசாரிப்பதை அவர் ஓரக்கண்ணால் ரகசியமாக நோட்டமிடும் காட்சி பதிவாகி இருந்தது.

    எனவே, போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. அந்த நபர் யார்? என்று அம்சபிரபாவின் குடும் பத்தினரிடம் விசாரித்தனர். அவர் பின் வீட்டு வாலிபர் என்று கூறினார்கள்.

    எனவே, போலீசார் அவரை கண்காணித்தனர். அவருடைய நடவடிக்கைகள் அவர்தான் கொலையாளியாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது. அவரை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.

    கொலை நடந்த போது, நீ எங்கிருந்தாய்? என கேட்டதற்கு ராஜா தியேட்டரில் படம் பார்த்து கொண்டு இருந்தேன் என்று கூறினார்.

    உடனே போலீசார் கேமராவில் உள்ள காட்சிகளை காட்டி இதில் இருப்பது நீதானே என்று கேட்டார்கள். ஆமாம் என்று அந்த வாலிபர் கூறினார்.

    படம் பார்க்க போன நீ எப்படி இந்த இடத்துக்கு வந்தாய்? என்று கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு விசாரித்தனர். வேறு வழியில்லாமல் நான்தான் கொலையாளி என்பதை கூறினார். அதன் பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.

    அந்த வாலிபர் நீண்ட காலமாக மும்பையில் உள்ள அவரது பாட்டி வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்புதான் புதுவை வந்தார்.

    இங்கு வந்ததும் புறா வளர்க்க ஆரம்பித்தார். அந்த புறா பிரச்சினைதான் கொலை வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

    இவ்வளவு காலம் மும்பையில் இருந்த அவர் ஏன் புதுவைக்கு வந்தார்? என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மும்பையில் ஏதேனும் தவறு செய்து இருப்பாரோ? என கருதி அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×