search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி.கே.புரம் வாலிபர் கொலையில் 3 பேர் கைது- முக்கிய கொலையாளி உள்பட  4 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    X

    வி.கே.புரம் வாலிபர் கொலையில் 3 பேர் கைது- முக்கிய கொலையாளி உள்பட 4 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்

    • சிவராமன் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
    • 7 பேர் கொண்ட கும்பல் சிவராமனை சரமாரியாக வெட்டியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே கோடாரங்குளம் பகுதியை சேர்ந்த வர் தங்கபாண்டியன். இவருடைய மகன் செல்வா என்ற சிவ ராமன்(வயது 25). இவர் பி.ஏ. படித்து விட்டு தனி யார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கொலை

    இவருடைய குடும்பத்தின ருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான சுடலை முத்து குடும்பத்தின ருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலையில் சிவராமன் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றபோது சுடலைமுத்து மகன் உலகநாதன் என்ற சங்கர் செல்போனில் சிவராமனை தொடர்பு கொண்டு சொத்து பிரச்சினை தொட ர்பாக பேச ஆலடியூர் கல் குவாரி அருகில் வருமாறு சிவராமனை அழைத்தார்.

    இதனை நம்பிய சிவராமன் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றார். அப்போது கல்குவாரி அருகில் சாலையோரம் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சிவராமனை சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.

    3 பேர் கைது

    இதுகுறித்து வி.கே.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து பிரம்மதேசத்தை சேர்ந்த முருகன், அம்பையை சேர்ந்த வெங்க டேஷ், மருதப்புரத்தை சேர்ந்த ராசு ஆகிய 3 பேரை கைது செய்தார்.

    இதில் தொடர்புடைய முக்கிய கொலையாளியான சங்கர், ராஜா உள்ளிட்ட 4 பேரை பிடிக்க அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×