என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய அரசு"
- சுமார் 25 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
- தபால் துறை, இன்சூரன்ஸ், வங்கிகள், தணிக்கை துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் இதில் கலந்துகொள்ள தயாராகி வருகின்றனர்.
சென்னை:
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
மத்திய தொழிற்சங்கங்கள் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ. என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து போராட்டம் நடக்கிறது. தொழிலாளர் நலச் சட்டம் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 4 ஆக சுருக்கி லேபர் கோடு என்று அமைக்கப்பட்டு சட்டங்கள் இருப்பதை கண்டிக்கும் வகையில் போராட்டத்தை தொழிலாளர்கள், விவசாயிகள் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
சுமார் 25 கோடி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
தபால் துறை, இன்சூரன்ஸ், வங்கிகள், தணிக்கை துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் இதில் கலந்துகொள்ள தயாராகி வருகின்றனர்.
தொழிலாளருக்கு விரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட சில சங்கங்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து களத்தில் இறங்க உள்ளன.
12-ந்தேதி அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- 5 ஆண்டு கால சாதனைகளையும் மக்களிடம் எடுத்து சொல்ல பரப்புரை பயணம் தொடங்க உள்ளோம்.
- 4 துறைகளில் பல சீரிய திட்டங்களை வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் அனைவரும் கல்வி கற்க வேண்டுமென முதலமைச்சர் பல திட்டங்களை அறிவித்துள்ளார் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அனைவரும் கல்வி கற்க வேண்டுமென முதலமைச்சர் பல திட்டங்களை அறிவித்துள்ளார்.
கல்வி, மருத்துவம், உணவு பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகிய 4 துறைகளில் பல சீரிய திட்டங்களை வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் நாளை முதல் திராவிட முன்னேற்றக் கழகம் பிரச்சாரத்தை தொடங்குகிறது.
திமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களையும், 5 ஆண்டு கால சாதனைகளையும் மக்களிடம் எடுத்து சொல்ல பரப்புரை பயணம் தொடங்க உள்ளோம்.
திமுக மீது சொல்லப்படும் குற்றங்களை பொதுமக்களிடம் விளக்க தமிழ்நாடு தலைகுனியாது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் மற்றும் துரோகம் செய்யும் அரசாக மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களையும் மத்திய பாஜக அரசு வழங்கவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக் குழு ஒழுங்குமுறை விதிமுறைகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை, மிகவும் தேவையானவை.
- சமூகநீதியை பாதுகாக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது வருத்தம் அளிக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு முடிவு கட்டும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழு வகுத்து செயல்படுத்தியுள்ள 2026-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழு ( உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல் ) ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. சமூகநீதியை பாதுகாக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது வருத்தம் அளிக்கிறது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான உயர்கல்வி நிறுவனங்களிலும் சாதி அடிப்படையில் பாகுபாடுகள் நிலவுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தும், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா சாதி அடிப்படையிலான சீண்டல்களின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்தும், 2012-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழு வகுத்த விதிகளின் போதாமை குறித்து உச்சநீதிமன்றம் எழுப்பிய வினாக்களின் அடிப்படையில் இந்த ஒழுங்குமுறை விதிகள் வகுக்கப்பட்டு அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இந்த விதிகளின்படி ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் சாதியப் பாகுபாடுகள் குறித்த புகார்களை விசாரிக்க சமத்துவக் குழுக்கள் அமைக்கப்படுவதும், அந்தக் குழுக்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய சமூகங்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டியதும் கட்டாயம் ஆகும். இது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை சாதிய பாகுபாட்டில் இருந்து பாதுகாப்பதற்கான நடைமுறை தானே தவிர வேறு எந்த சமூகங்களுக்கும் எதிரான செயல் அல்ல.
ஒரு வகையில் பார்த்தால் இந்த விதிகள் வகுக்கப்படுவதற்கு முன்னோடி நான் தான். 2004--&09 ஆண்டு காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்த போது, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆய்வுக்காக சென்ற போது அங்கு பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் தங்களுக்கு சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக என்னிடம் புகார் தெரிவித்தனர். எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள விடுதிகள், உணவகங்கள், விளையாட்டுகள், விடைத்தாள் மதிப்பீடுகள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் தங்களுக்கு பாகுபாடு இழைக்கப்படுவதாக என்னிடம் குற்றஞ்சாட்டினார்கள்.
அதைத் தொடர்ந்து அப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுக்தேவ் தோரட் தலைமையில் குழு அமைத்து சாதிய அடிப்படையில் மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அதன்படியே தோரட் குழு அளித்த அறிக்கையை செயல்படுத்தவும் ஆணையிட்டேன்.
உயர்கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடுகள் நிலவுவது உண்மை. பல்கலைக்கழக மானியக்குழு நடைமுறைப் படுத்தியுள்ள விதிகளின் மூலம் பாகுபாடுகளை களைய முடியும் என்பதும் உண்மை. அந்த விதிகளுக்கு எதிராக சிலர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதற்காகவே விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டிய தேவை இல்லை.
அதுமட்டுமின்றி, 2012-ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குமுறை விதிகள் போதுமானவையாக இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் தான் இப்போதைய விதிகள் வகுக்கப்பட்டன. அவ்வாறு இருக்கும் போது, இப்போதைய விதிகளை கிடப்பில் போட்டுவிட்டு, 2012-&ஆம் ஆண்டின் விதிகளை மறு உத்தரவு வரும் வரை செயல்படுத்த வேண்டும் என்று கூறுவதும் நியாயமல்ல.
பல்கலைக்கழக மானியக் குழு ( உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) ஒழுங்குமுறை விதிமுறைகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை, மிகவும் தேவையானவை. இந்த உண்மையை உச்ச நீதிமன்றத்தில் போதிய தரவுகளுடன் எடுத்துக் கூறி பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குமுறை விதிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை விரைந்து அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
- பிப்ரவரி 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் உள்ள முதன்மை குழு அறையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்திற்கு வரவிருக்கும் முக்கிய பிரச்சனைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
- விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
- தேசிய கீதத்தைப் பாடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் சட்டப்பூர்வமாக வகுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடலை போல, வந்தே மாதரம் பாடப்படும்போதும் எழுந்து நிற்பது உள்ளிட்ட புதிய விதிகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
வந்தே மாதரம் 150 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டங்களை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்படும், புதிய விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு அளித்த விளக்கத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேசிய கீதமான ஜன கண மன பாடலுக்கு இணையான அந்தஸ்து தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலுக்கும் உண்டு.
தேசிய கீதத்தைப் பாடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் சட்டப்பூர்வமாக வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், வந்தே மாதரம் பாடலைப் பாடும்போது அத்தகைய குறிப்பிட்ட சட்டப்பூர்வ விதிகள் ஏதும் இதுவரை இயற்றப்படவில்லை.
எனினும், இப்பாடல் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்ததாலும், நாட்டின் தேசபக்தியின் அடையாளமாக இருப்பதாலும், இப்பாடல் இசைக்கப்படும் போது குடிமக்கள் அதற்குரிய மரியாதையைத் தானாக முன்வந்து அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றங்கள், தேசியப் பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்க முடியாது என்றும், ஆனால் அதற்குரிய கௌரவத்தைச் சிதைக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பிரதமரின் அலுவலகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் ஆளுநர்களுக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது
- தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வருவதாக அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, காங்கிரஸ் மற்றும் அக்கட்சி ஆளாத மாநில அரசுகளுக்கு முட்டுக்கட்டை போடவும், தொந்தரவு அளிக்கவும் ஆளுநர்களை "கைப்பாவைகளாக" பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே சனிக்கிழமை குற்றம் சாட்டினார்.
கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கார்கே, பிரதமரின் அலுவலகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் ஆளுநர்களுக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகவும், குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் தயாரித்துக் கொடுக்கும் உரைகளை வாசிக்க வேண்டாம் என்று அவர்களைத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
"இது கர்நாடகாவோடு மட்டும் நின்றுவிடவில்லை. தமிழ்நாடு, கேரளா மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் உள்ள மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது," என்று அவர் கூறினார். தொடர்ந்து கர்நாடக அரசுக்கும், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிற்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலைக் குறிப்பிட்ட கார்கே, ஆளுநர்கள் வேண்டுமென்றே மசோதாக்களைத் தாமதப்படுத்துவதாகவும், திருப்பி அனுப்புவதாகவும், மேலும் ஆட்சி நிர்வாகத்தை முடக்குவதற்காக ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பதாகவும் கூறினார்.
"தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வருவதாக அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த அரசு நாட்டை தவறான பாதையில் அழைத்துச் செல்கிறது," என்று அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மாற்றம் குறித்து பேசிய கார்கே, மக்களின் நலன் சார்ந்த சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் எந்தவொரு முயற்சியையும் காங்கிரஸ் எதிர்க்கும் என்று கூறினார்.
"எந்தவொரு கட்சியும் எப்போதும் ஆட்சியில் இருப்பதில்லை, ஆனால் நாடு நிலையானது," என்று கூறிய அவர், பாஜக அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் விட ஆர்எஸ்எஸ் மற்றும் தனது கட்சிக்கே முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
- பிற நாடுகளால் தேடப்படும் 203 குற்றவாளிகள் இந்தியாவில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
- 2024-25 ஆண்டுகளுக்கு இடையில் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் பட்டியலில் உள்ள 70 இந்தியக் குற்றவாளிகள் 2024-25 ஆண்டுகளுக்கு இடையில் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பல கோடி மோசடி செய்து தப்பிய விஜய் மல்லையா, லலித் மோடி உள்ளிட்டோரும் இதில் அடங்குவர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தேடப்படும் பட்டியலில் இருந்தவர்களில் 27 பேர் கடந்த ஓராண்டில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும் விசாரணைக்கு ஒத்துழைப்புக் கோரியும் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கு 74 கடிதங்களை அனுப்பியுள்ளன.
இதில் 54 கடிதங்கள் சிபிஐ சார்பிலும், 20 கடிதங்கள் மாநிலப் புலனாய்வு அமைப்புகள் சார்பிலும் அனுப்பப்பட்டுள்ளன.
அதே வேளையில், பிற நாடுகளால் தேடப்படும் 203 குற்றவாளிகள் இந்தியாவில் இருப்பதாகவும் மத்திய அரசின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
- மத்திய அரசு உதவி இல்லாவிட்டால் ஏதும் செய்ய முடியாது.
- பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் புதுச்சேரிக்கு வரவுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி சார்பில் லாஸ் பேட்டை சலவைத்துறை திறப்பு விழா நடைபெற்றது.
அதில் புதிதாக கட்டப்பட்ட துணி பாதுகாப்பு அறைகளை திறந்து பயனாளிகளிடம் சாவிகளை வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுச்சேரியில் முதியோர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ. 500 ஓய்வூதியம் பிப்ரவரி 7-ந்தேதி முதல் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு உயர்த்தப்பட்ட ரூ.2500 உதவித் தொகை வருகிற பிப்ரவரி 10-ந் தேதி முதல் கிடைக்கும். புதிதாக தொடக்கப்பள்ளிகளில் 190 ஆசிரியர்கள் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்கள்.
இளநிலை எழுத்தர், முதுநிலை எழுத்தர்கள் 400 பேர் அடுத்த மாதம் எடுக்கவுள்ளோம். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 4 ஆயிரம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை தந்துள்ளது. அடுத்து 500 அங்கன்வாடி ஊழியர்கள் பணியமர்த்த உள்ளோம். சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை தருவோம் என சொன்னோம். அரசு மற்றும் தனியார் மூலம் வேலை தரப்பட்டுள்ளது.
சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கான 750 ஏக்கர் நிலம் எடுத்து அப்படியே உள்ளது. புதிய தொழிற்பேட்டையை இங்கு உருவாக்க உள்ளோம். பல தொழிற்சாலைகள் வரவுள்ளன. ஏராளமான இளையோருக்கு வேலை கிடைக்கும். மீனவ சமூக மக்களுக்கு ரூ. 123 கோடி ஒதுக்கி பணிகள் செய்கிறோம்.
மத்திய அரசு உதவி இல்லாவிட்டால் ஏதும் செய்ய முடியாது. பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் புதுச்சேரிக்கு வரவுள்ளார். நிறைய திட்டங்கள் தரவுள்ளார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த அரசு மத்திய அரசு நிதி உதவியுடன் மேம்பாட்டு பணிகளைச் செய்து வருகிறது.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க பணிக்கு ரூ 450 கோடியில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வ கணபதி எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- 2027 இல் என்று கணக்கெடுப்பு தொடங்கும்
- வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட கேள்விகள் உள்ளன.
இந்தியாவில் நீண்ட நாட்களாகத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, இரண்டு கட்டங்களாக இந்தக் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் வரை வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும்.
இதைத்தொடர்ந்து 2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணியை முன்னிட்டு வீடு வீடாக குடும்பங்களிடம் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
குடும்பத் தலைவரின் பெயர் மற்றும் பாலினம், வீட்டின் தரம் மற்றும் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்கள், வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி குறித்த விவரங்கள், வீட்டில் உள்ள மின்னணு சாதனங்கள், பயன்படுத்தப்படும் வாகனங்கள், அதற்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் உள்ளிட்டவை இந்த 33 கேள்விகளில் அடங்கும்.
மேலும், இந்த முறை கணக்கெடுப்பு பணிகளில் நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது.
- பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் உள்ள முதன்மை குழு அறையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதத்திற்கு வரவிருக்கும் முக்கிய பிரச்சனைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தனர்.
- ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு உரையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
- கேரள சட்டமன்றத்திலும் அரசுக்கும் ஆளுநருக்கும் உரையில் வேறுபாடு எழுந்தது
முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலத்தில் இன்று (ஜனவரி 22) சட்டமன்றத் கூட்டத் தொடர் தொடங்கியது. வரும் 31 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும்.
கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று மரபுப்படி அம்மாநில ஆளுநர் தவார்சந்த் கெலாட் உரையுடன் அவை தொடங்க இருந்தது.
தனது உரையில் 2 வரிகளை மட்டுமே வாசித்த ஆளுநர் கெலாட், சட்டென உரையை நிறுத்தி அவையை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்.
வழக்கமாக ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை மாநில அரசு தயாரிக்கும். அந்த வகையில் கர்நாடக அரசு தயாரித்த உரையில் 11 பத்திகளில் ஆளுநர் கெலாட்டுக்கு உடன்பாடு இல்லையாம்.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கம் செய்து மத்திய அரசு கொண்டு வந்த விபி ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிர்ப்பு உட்பட மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் அந்த உரையில் இடம்பெற்றுள்ளதால் அதை வாசிக்க மறுத்து கெலாட் அவையை விட்டு வெளியேறி உள்ளார்.
முன்னதாக நேற்று முன் தின் தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடினார்கள், தேசிய கீதம் பாடவில்லை என கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் 4 வது ஆண்டாக வெளியேறினார்.
அதேபோல் கேரள சட்டமன்றத்திலும் அரசுக்கும் ஆளுநருக்கும் உரையில் வேறுபாடு எழுந்தது. இந்த நிலையில் கர்நாடகாவிலும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறி உள்ளார்.
இதன் மூலம் தென் மாநிலங்களில் ஆளும் அரசுகளுடன் ஆளுநர்களை வைத்து மத்திய அரசு அரசியல் செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.
- கடன் வாங்கும் வரம்பை சுமார் ரூ.4000 கோடி வரை குறைத்தது மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான கட்டுப்பாடுகள் மாநிலத்தின் நிதி நிலையைப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
- ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும்
தமிழ்நாட்டைப் போல கேரளாவிலும் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. கேரள அரசின் சாதனைகளை பட்டியலிட்டு அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையைத் தொடங்கி வாசித்தார். அப்போது, கேரளாவிற்கு வழங்கப்பட வேண்டிய நிதிப் பங்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக, கடன் வாங்கும் வரம்பை சுமார் ரூ.4000 கோடி வரை குறைத்தது மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான கட்டுப்பாடுகள் மாநிலத்தின் நிதி நிலையைப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனால் 2025-26 நிதியாண்டில் சுமார் ரூ.17,000 கோடி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் கேரளா குறிப்பிடத்தக்க சமூக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகப் பாராட்டினார். வறுமை ஒழிப்பு, வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மாநில அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். கேரள மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், பத்து ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் மலையாளத்தை மாநிலத்தின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் உரையில் விளக்கினார். அதே வேளையில், சிறுபான்மையினரின் மொழி உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் கேரளாவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும். கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜனவரி 29 அன்று அவையில் தாக்கல் செய்வார்.






