

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடந்தது. இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
50 ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலி வீரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில், 1,000 தரவரிசை புள்ளிகள் வழங்கும் 9 மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் வெற்றி பெற்ற 2-வது வீரர் என்ற பெருமையை ஜானிக் சின்னர் பெற்றார்.
ஏற்கனவே செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.