துப்பாக்கி சுடும் போட்டியில் கிடைத்த 11 பதக்கங்களை பிபின் ராவத்துக்கு அர்ப்பணித்த வீராங்கனை

தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது. இதில் பங்கேற்ற பந்தாவி சிங் 11 தங்கப் பதக்கங்களை பெற்றார்.
பந்தாவி சிங் - பிபின் ராவத்
பந்தாவி சிங் - பிபின் ராவத்
Published on

போபால்:

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பெற்ற 11 தங்கப் பதக்கங்களை பிபின் ராவத்துக்கு வீராங்கனை ஒருவர் அர்ப்பணித்துள்ளார். அவரது பெயர் பந்தாவி சிங். அவர் பிபின்ராவத்தின் உறவினர் ஆவார்.

தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது. இதில் பங்கேற்ற பந்தாவி சிங் 11 தங்கப் பதக்கங்களை பெற்றார். இந்த பதக்கங்களை அவர் பிபின் ராவத்துக்கு அர்ப்பணித்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘பதக்கங்களை பெற்று உறவினரும், ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவருமான பிபின் ராவத்துக்கு அர்ப்பணிப்பதற்காகவே நான் இந்த போட்டியில் பங்கேற்றேன். அவர் எனது ஆலோசகர், வழிகாட்டி ஆவார்’ என்றார்.

20 வயதான பந்தாவி சிங் விபத்தில் பலியான பிபின் ராவத்தின் மனைவி மதுலிகாவின் சகோதரர் யாஸ்வரதன் சிங்கின் மகள் ஆவார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com