அனுமன் சன்னிதிகளில் செந்தூரம் தருவது ஏன்?

அனுமனை வழிபடக் கூடிய அனைத்து ஆலயங்களிலும் செந்தூரம் வழங்குவதைப் பார்க்கலாம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
அனுமன் சன்னிதிகளில் செந்தூரம் தருவது ஏன்?
Published on

அனுமனை வழிபடக் கூடிய அனைத்து ஆலயங்களிலும் செந்தூரப் பொட்டு வழங்குவதைப் பார்க்கலாம். இந்த செந்தூரப் பொட்டு எதற்காக வழங்கப்படுகிறது என்பதற்கு ராமாயணத்தில் ஒரு கதை இருக்கிறது.

ஒரு முறை சீதாதேவி தனது நெற்றியில் செந்தூரப் பொட்டு வைத்திருந்தார். அதைப் பார்த்த அனுமன், ‘தாயே! எதற்காக செந்தூரம் வைத்துள்ளீர்கள்?’ என்றார்.

சீதையோ, தன் கணவரான ஸ்ரீராமர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக செந்தூரம் வைத்திருப்பதாக கூறினார்.

இதைக் கேட்ட அனுமன், உடனடியாகச் சென்று தன் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டார். ராமர் நலமுடன் இருக்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்குமே உண்டு. ஆனால் அந்த எண்ணம் அனுமனிடம் எல்லை கடந்ததாக இருந்தது. அதனால்தான் அவர் தன் உடல் முழுவதிலும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டார்.

இதை நினைவு கூறும் வகையில்தான் அனுமன் சன்னிதிகளில் செந்தூரம் கொடுக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com