ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் - ஒரே ஆண்டில் பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்கள் 51 சதவீதம் உயர்வு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. தலிபான்கள் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.
தலிபான்கள்
தலிபான்கள்
Published on

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. தலிபான்கள் கடந்த ஆண்டு அங்கு ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்து ஒரு ஆண்டு முடிந்துள்ளது.

இந்நிலையில், தலிபான்கள் ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில், பாகிஸ்தானில் 51 சதவீதம் அளவுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

பாகிஸ்தானில் ஆகஸ்ட் 2020 முதல் ஆகஸ்ட் 14, 2021 வரை நடத்தப்பட்ட 165 தாக்குதல்களில் 294 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 598 பேர் காயமடைந்தனர் என இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் ஸ்டடீஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆனால், ஆகஸ்ட் 15, 2021 மற்றும் ஆகஸ்ட் 14, 2022 க்கு இடையில் நடந்த 250 தாக்குதல்களில் 433 பேர் கொல்லப்பட்டனர். 719 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com