Iran War | ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான்! - இந்தியாவிற்கு பின்னடைவு

மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Pakistan - trump
Pakistan - trump
Published on

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களையும் குறிவைத்து ஈரான் பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

அத்துடன் மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கத்தார் போன்ற நாடுகள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இது உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு மேலாக உலகின் முக்கியமான கடல்வழி போக்குவரத்துக்கான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. அதன் வழியாக செல்லும் எதிரிகளின் கப்பல்களை வீழ்த்துவோம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது. இதனாலும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை ஈரான் மதிக்கவில்லை.

இதையடுத்து மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலானக் குழு 15 அம்ச திட்டத்துடன் விரைவில் பாகிஸ்தான் செல்லத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தால் பிராந்திய அளவில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com