நேபாளத்தின் புதிய அதிபராக ராம் சந்திர பவுடல் தேர்வு

நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவுடல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.அவருக்கு 214 எம்.பி.க்கள், 352 மாகாண சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது.
நேபாளத்தின் புதிய அதிபராக ராம் சந்திர பவுடல் தேர்வு
Published on

காத்மாண்டு:

நேபாள அதிபர் பித்யாதேவி பண்டாரியின் பதவிக்காலம் வரும் 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அங்கு புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது.

இதில் நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் சந்திர பவுடல் (78), புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 214 எம்.பி.க்கள், 352 மாகாண சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. நாட்டின் முக்கியமான 8 கட்சிகள் ராம் சந்திர பவுடலை ஆதரித்தன.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுபாஷ் சந்திர நெபாங்கை முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் கட்சி மட்டுமே ஆதரித்தது.

புதிய அதிபர் ராம்சந்திர பவுடலுக்கு பிரதமர் பிரசந்தா, முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தூபா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com