சூடானில் திருமண நிகழ்ச்சியில் டிரோன் தாக்குதல்- 30 பேர் பலி

சூடானின் வடக்கு டர்பரில் உள்ள குடும் நகரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
சூடானில் திருமண நிகழ்ச்சியில் டிரோன் தாக்குதல்- 30 பேர் பலி
Published on

சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டு ராணுவத்துக்கும், துணை ராணுவ படைக்கும் மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சூடானின் வடக்கு டர்பரில் உள்ள குடும் நகரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு அரசின் ராணுவ படைகளே காரணம் என்று உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com