என் மலர்tooltip icon

    உலகம்

    இத்தாலியில் சோகம்: கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி
    X

    இத்தாலியில் சோகம்: கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி

    • நேபிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு கேபிள் கார் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது.
    • இதில் கேபிள் அறுந்து விழுந்த விபத்தில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர்.

    மிலன்:

    இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் விரிகுடா மற்றும் வெசுவியஸ் மலை காட்சிகளுக்காக கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு சீசன் என்பதால் கேபிள் கார் சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டது.

    இந்நிலையில், நேபிள்சுக்கு தெற்கே மான்டே பைட்டோவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற கேபிள் காரில் கேபிள் அறுந்து விழுந்ததில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

    விபத்து குறித்து தகவலறிந்ததும் இத்தாலிய ஆல்பைன் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×