கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும்- தங்க தமிழ்ச்செல்வன்

கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள நன்கொடையாளர்கள் கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும்- தங்க தமிழ்ச்செல்வன்
Published on

ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள நன்கொடையாளர்கள் கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே பாராளுமன்ற உறுப்பினர் என்று பெயர் போட்டுக் கொள்ளும் அளவுக்கு தைரியத்தை ஓ.பன்னீர்செல்வம்தான் கொடுத்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்வெட்டு.

தேனி பாராளுமன்ற தொகுதியில் வருகிற 19-ந்தேதி நடைபெறும் மறு வாக்குப்பதிவு நியாயமாக நடக்கும் என்று நம்புகிறோம். அதே போல் அன்றைய தினம் நடைபெறும் 4 சட்டமன்ற தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடக்க தேர்தல் ஆணையம் உறுதியளிக்க வேண்டும்.

23-ந்தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அ.ம.மு.க. வெற்றி பெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com