

செங்கல்பட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் அனைத்திலும் கட்டிங்... கமிஷன்... கரப்ஷன் என்று கூறினார்.
அப்போது அவரிடம், கூட்டணியில் இருந்தபோது ஏன் எதிர்த்து பேசவில்லை என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த வைகோ, கூட்டணியில் இருந்துகொண்டே எப்படி எதிர்ப்பது என கூட்டணி தர்மம் குறித்து விளக்கினார்.
மேலும், கேள்வி கேட்ட நிருபரை வைகோ மற்றும் மதிமுக நிர்வாகிகள் வெளியே அனுப்பினர்.