திமிர் பிடித்தவர்.. மோசமான குணம் படைத்தவர் - செங்கோட்டையனை விளாசிய எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவை செங்கோட்டையன் மதித்தே இல்லை. செங்கோட்டையன் மோசமான மனிதர் என ஜெயலலிதா கூறினார்.
திமிர் பிடித்தவர்.. மோசமான குணம் படைத்தவர் -  செங்கோட்டையனை விளாசிய எடப்பாடி பழனிசாமி
Published on

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

* கட்சி கட்டுப்பாட்டை மீறியதாலும் அகங்காரத்தின் காரணமாகவும் செங்கோட்டையன் வெளியேற்றப்பட்டார்.

* செங்கோட்டையன் திமிர் பிடித்தவர். மோசமான குணம் படைத்தவர்.

* கட்சித் தொண்டர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டவர் செங்கோட்டையன்.

* செங்கோட்டையன் மீது அவரது மனைவி, மகன் புகார் அளித்ததால் அவரது பதவி பறிக்கப்பட்டது.

* ஜெயலலிதாவை செங்கோட்டையன் மதித்தே இல்லை. செங்கோட்டையன் மோசமான மனிதர் என ஜெயலலிதா கூறினார்.

* எனது அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக செங்கோட்டையன் கண்ணீர் வடித்தார்.

* முதலமைச்சராக இருந்தபோதே ஆதாரங்களை சேகரித்து விட்டேன். செங்கோட்டையனுக்கு எதிராக அவ்வளவு ஆதாரம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com