

சேலம்:
சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 2026 தேர்தலில் பாஜக சவால்களை எப்படி சமாளிப்பது, அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தன்னை சந்தித்த முன்னாள் அமைச்சர்களிடம் வெற்றி வியூகங்களை எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார். மேலும் பிரிந்த தலைவர்களை கட்சியில் சேர்ப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவில்லை என தகவல் வெளியாகவில்லை.
மூத்த நிர்வாகிகள், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.