என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது

பொதுக்கல்வி, தொழில் முறைக்கல்வி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு மாணவர்களுக்கான தர வரிசை பட்டியல் ஆகஸ்டு 8-ந்தேதி வெளியிடப்படும்.
என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது
Published on

சென்னை:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதையடுத்து என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்றே தொடங்கியது.

https://www.tneaonline.org என்ற இணைய தள முகவரியில் விண்ணப்ப பதிவு தொடங்கியது. மாணவர்கள் இதில் சொந்தமாக விண்ணப்பிக்கலாம். தாங்கள் பயின்ற பள்ளிகள், அரசின் இலவச மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது அவை 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையங்களில் மாணவர்கள் உதவி பெறலாம்.

மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த மையங்கள் செயல்பட உள்ளன. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அதில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் கடைசி நாள் ஜூலை 19-ந் தேதி ஆகும். அதே நாளில் என்ஜினீயரிங்கில் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவும் நிறைவடைகிறது.

இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமவாய்ப்பு எண் ஜூலை 22-ந்தேதி ஒதுக்கீடு செய்யப்படும். சேவை மையம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 20-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும்.

மாணவர்களுக்கான தர வரிசை பட்டியல் ஆகஸ்டு 8-ந்தேதி வெளியிடப்படும். இதையடுத்து ஆகஸ்டு 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சேவை மையம் மூலம் குறைகளை நிவர்த்தி செய்யலாம்.

மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கு ஆகஸ்டு 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கலந்தாய்வு நடை பெறும்.

பொதுக்கல்வி, தொழில் முறைக்கல்வி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கு ஆகஸ்டு 22-ந்தேதி முதல் அக்டோபர் 14-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். துணை கலந்தாய்வு அக்டோபர் 15, 16-ந்தேதி களில் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com