சபாநாயகர் அப்பாவுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். சட்டசபை கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் சபாநாயகர் அப்பாவுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து மனு அளித்தனர்.
சபாநாயகர் அப்பாவுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
Published on

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டம் தொடர் 6 மாத கால இடைவெளிக்குள் கூட்டப்பட வேண்டும். அதன்படி வருகிற 20-ந்தேதிக்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதனால் அக்டோபர் 9-ந்தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடுகிறது.

இன்றைய சபைக் கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.

இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் சபாநாயகர் அப்பாவுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து மனு அளித்தனர்.

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுடன் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com