Egmore Railway Station| பயணிகளுக்கு நிம்மதி: எழும்பூர் 10, 11-வது நடைமேடைகளில் ஏப். 5 முதல் மீண்டும் மின்சார ரெயில்கள் இயக்கம்!

வழக்​க​மான ரெயில் சேவை குறைக்​கப்​பட்​டு தற்​காலிக கால அட்​ட​வணைப்​படி 20 நிமிடங்​களுக்கு ஒரு மின்​சார ரெயில் இயக்​கப்​படு​கிறது.
Egmore Railway Station| பயணிகளுக்கு நிம்மதி: எழும்பூர் 10, 11-வது நடைமேடைகளில் ஏப். 5 முதல் மீண்டும் மின்சார ரெயில்கள் இயக்கம்!
Published on

சென்னை எழும்​பூர் ரெயில் நிலை​யத்​தில் ரூ.735 கோடி மதிப்​பில் மறுசீரமைப்பு பணி​கள் முழு​வீச்​சில் நடைபெற்று வருகின்​றன. இதன் ஒரு பகு​தி​யாக, பிர​மாண்ட நடைமேம்​பாலம் அமைக்​கும் பணி நடந்து வரு​கிறது. இதற்கு அடித்​தளம் அமைக்​கும் பணி காரண​மாக, 10 மற்றும் 11-வது நடைமேடைகள் மூடப்​பட்​டன. இதனால், கடற்​கரை - தாம்​பரம் - செங்கல்பட்டு வழித்தடத்​தில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி முதல் 44 மின்​சார ரெயில் சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. 10, 11-க்கு பதிலாக, 5, 6-வது நடைமேடைகளில் புறநகர் மின்​சார ரெயில்​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

வழக்​க​மான ரெயில் சேவை குறைக்​கப்​பட்​டு தற்​காலிக கால அட்​ட​வணைப்​படி 20 நிமிடங்​களுக்கு ஒரு மின்​சார ரெயில் இயக்​கப்படு​கிறது. இது மட்​டுமின்​றி, இரு மார்க்​கத்​தி​லும் எழும்​பூர் நோக்​கிச் செல்​லும்​போது ரெயில்​கள் தாமத​மாக இயக்கப்படுகின்றன. மேலும் எழும்​பூர், சென்ட்​ரலுக்கு உரிய நேரத்​தில் செல்ல முடி​யாமல் விரைவு ரெயில்​களை தவற​விடும் நிலை​யும் ஏற்​படு​கிறது. இதனால், பயணி​கள் கடும் அவதியடைந்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், எழும்​பூர் ரெயில் நிலை​யத்​தின் 10, 11-வது நடைமேடைகளில் இருந்து வழக்​க​மான புறநகர் மின்​சார ரெயில் சேவை வருகிற 5-ந்தேதி முதல் தொடங்​கும் என்று ரெயில்வே அதிகாரி​கள் தெரி​வித்​துள்​ளனர். மேலும் பழைய அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவை இயங்​கத் தொடங்​கும் என தெரிவித்துள்ளதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com