என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சூரசம்ஹாரம் முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு பேருந்து இயக்கம்.
- திருச்செந்தூருக்கு செல்ல இருப்பவர்கள் இணையதளம், ஆப் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு.
திருச்செந்தூரில் வரும் 7ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு வரும் 6ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரும் 6ம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதேபால், வரும் 7ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், திருச்செந்தூருக்கு செல்ல இருப்பவர்கள் www.tnstc.in இணையதளம் மற்றும் tnstc official ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






