தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு

2 நாட்களாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது.சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு
Published on

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி இன்று வரை நடைபெற்றது. சட்டப்பேரவையின் கேள்வி நேரம் தொடங்கியதும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர்.

குறிப்பாக மதுரை டங்ஸ்டன் சுரங்கம், சாத்தனூர் அணை திறப்பு மற்றும் அதானி விவகாரம் ஆகிய முக்கிய விவகாரங்கள் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில், 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com