இது பீருக்காக வந்த கூட்டம் இல்லை - திமுகவை சீண்டிய செல்லூர் ராஜூ

தல்லாகுளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி ரத்த தான விழா நடைபெற்றது. நன்றி, வணக்கம் எனக்கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பை செல்லூர் ராஜூ முடித்துக்கொண்டார்.
இது பீருக்காக வந்த கூட்டம் இல்லை - திமுகவை சீண்டிய செல்லூர் ராஜூ
Published on

தல்லாகுளம்:

மதுரை மாவட்டம் தல்லாகுளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி ரத்த தான விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், இது பீருக்காக வந்த கூட்டம் இல்லை. ரத்தம் கொடுப்பதற்காக வந்த கூட்டம் என்றார்.

இதனிடையே, பா.ம.க.வில் உள்ள பிரச்சனைகள் குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நன்றி, வணக்கம் எனக்கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பை செல்லூர் ராஜூ முடித்துக்கொண்டார்.

கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் திமுக இளைஞரணி கூட்டத்தில் "பீர்" மதுபானம் பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய. இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com